கூடுதல் கட்டணம் வசூல்: கோவையில் 18 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்- அதிகாரிகள் எச்சரிக்கை

தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மத்திய வட்டாரப் போக்குவரத்து கழக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மத்திய வட்டாரப் போக்குவரத்து கழக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

கோவை மாநகரில் கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டு வந்த 18 ஆம்னி பேருந்துகளை மத்திய வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisment

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை  உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக கோவையிலிருந்து சென்னை, பெங்களூரு மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் செல்கின்றனர். இந்நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் மத்திய வட்டாரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக மாநகரில் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் சாலை வரி கட்டாத 18 ஆம்னி பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மத்திய வட்டாரப் போக்குவரத்து கழக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இதே போல் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: