/indian-express-tamil/media/media_files/5r1k9qVcQgNsbSj519O5.jpg)
"சரித்திர பதிவேடு குற்றவாளிகள் யார், யார் தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை கண்காணித்து வருகிறோம்." என்று கோவை போலீஸ் கமிஷனர் கூறினார்.
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மதியம் 12 மணியளவில் காவலர் குடும்பத்தினருக்கு நடைபெற்ற யோகா பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று காலை கொடிசியா மைதானத்தில் ரவுடி ஆல்வின் சுட்டுப் பிடிக்கப்பட்டார். ஆல்வின் கன்னியாகுமரியில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். அவர் மீது 3 கொலை, 2 கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஆல்வின் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை பல்வேறு இடங்களில் மூன்று, நான்கு மாதங்களாக தனிப்படை தேடி வந்தனர்.
15 நாட்களுக்கு முன்பு வேறு மாநிலத்தில் தங்கி இருந்தபோது அவரை தனிப்படை பிடிக்க சென்ற போது தப்பிச் சென்று விட்டார். இந்த சூழலில், இன்று அதிகாலை கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் கொடிசியா பகுதியில் அவரை காவலர்கள் பிடிக்க முற்பட்டனர்.
அப்போது ரவுடி ஆல்வின் ராஜ்குமார் என்ற காவலரை கத்தியால் தாக்கியதால் தற்காப்புக்காக ஆல்வின் சுடப்பட்டார். சரித்திர பதிவேடு குற்றவாளிகள் யார், யார் தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை கண்காணித்து வருகிறோம். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றும் அவர் கூறினார்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.