/indian-express-tamil/media/media_files/uAN5gNoXB2pW3TqCvNSh.jpg)
Coimbatore
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வாத்தியார் வில்லை பகுதியைச் சேர்ந்த ரவுடி ஆல்வினை, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய குற்றவழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வந்த ஆல்வின் (40), இன்று அதிகாலை கொடிசியா மைதானத்தில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்து.
இதையடுத்து உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், தலைமையிலான தனிப்படை போலீசார் அதிகாலை 2.30 மணியளவில் அங்கு விரைந்து, பிடிக்க முயற்சித்த போது ஆல்வின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீசாரை தாக்கினார்.
இதில் தலைமை காவலர் ராஜ்குமார் இடது மணிக்கட்டுப் பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து மற்ற காவலர்களை தாக்க முயற்சித்த தப்பி ஓட முயன்ற போது உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தற்காப்பிற்காக தான் வைத்திருந்த கை துப்பாக்கியால் ஆல்வினின் இரண்டு கால் முட்டிகளிலும் , துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.தற்பொழுது ஆல்வின், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.