/indian-express-tamil/media/media_files/NH8x5j8a06lRyp2dqPdm.jpg)
கோவை மாநகர காவல்துறையினருக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
coimbotore | Police: கோவையில் போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகர காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரடி பார்வையில் மாநகர ஆயுதப்படை மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்களுக்கான யோகா பயிற்சிகள் வாரம் ஒரு நாள் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் வழங்கப்படுகின்றன.
இதில் 500க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு யோகா பயீற்சி பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த வாரம் யோகா பயிற்சியும் வழங்கப்பட்டன. இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். இந்த யோகா பயிற்சி மூலம் சுவாச பிரச்சனையை நீக்கும் என்பதும், மன அழுத்த குறைவு, செரிமான பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை நீக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.