கோவை மாநகராட்சி பகுதியில் அரசியல் கட்சிகள் மாறிமாறி பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டியதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க மற்றும் பா.ஜ.க வினர் இடையே மோதல் ஏற்பட்டு சிறைக்குச் செல்லும் உருவானது.
அதனை தடுக்கும் விதமாக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேம்பால சுவர்களில் கோவை மாநகரை சுற்றியுள்ள சுற்றுலா தலங்களில், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை வைத்து ஓவியங்கள் வரையப்பட்டன.
விடுதலைப் போராட்ட தியாகிகளின் உருவத்தைத் தாங்கிய புகைப்படங்கள், போஸ்டர்களாக ஒட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் அரசியல் கட்சியினர் இடையே சுமூகமான சூழ்நிலை உருவானது.
/indian-express-tamil/media/media_files/mHUzCuQolr7p4SShKGgC.jpeg)
இந்நிலையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு தற்பொழுது ஒட்டப்பட்ட போஸ்டர்களால் மீண்டும் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதனால் ஏற்படும் மோதல்களை கட்டுப்படுத்த முடியும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“