/indian-express-tamil/media/media_files/MUJnIzy535l96V48Cwl7.jpeg)
Coimbatore
கோவை மாநகராட்சிபிரதான அலுவலக வளாகத்தில் சமுதாயப் பொறுப்பு நிதியின்கீழ் தனியார் வங்கியின் மூலம் வழங்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்பேட்டரியால் இயங்கும் ஆட்டோக்களை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமிபொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் தற்பொழுது பேட்டரி வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும் பேட்டரியை பயன்படுத்தி ஓடும் இந்தவாகனங்களால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். கோவை மாநகராட்சியில் சதவீதம் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் பணிகள் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவகிறது. பில்லூர் அணையில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாகநடைபெற்று வருகிறது. தற்போது டெங்கு பரவுகின்ற சூழ்நிலை இருப்பதால் சுகாதார மையங்களில்கூடுதல் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கபட்டுள்ளனர். டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காகஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.மேலும் பொது மக்கள் வீடு மற்றும் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.புயலின் காரணமாக காஞ்சிபுரம்சென்னை தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை அதிகளவில் பெய்த போது, முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மிக வேகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பான சூழ்நிலை கொண்டு வரப்பட்டது. பிளாஸ்டிக் பாட்டில்கள்சாக்கடையில் அடைத்திருந்த காரணத்தினால் தான்மழை நீர்சாலையில் தேங்கியது. முதல்வரால் தொடங்கி வைக்க்கப்பட்ட பொங்கல்பரிசு பல்வேறு இடங்களில் கொடுக்கப்பட்டு வரும் சூழலில் வருகிற ந் தேதி வரை தொடர்ந்து பரிசு தொகுப்பு வழங்கப்படும். நிதி பிரச்சனை இருந்தும் யாரும் விடுபடக் கூடாது என முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்.கோவை மாவட்டத்தில் கடைகளுக்கு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கோடியே லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்குபொங்கல் பரிசு தொகைகொடுக்கப்பட இருக்கின்றது. முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஏழு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் வந்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதன் மூலம் லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மகளிர் உரிமைத்தொகைஇலவசபேருந்து பயணம்காலை உணவு திட்டம்பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.கோவையில் அதிக மழை வந்தால் அதை எதிர் கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர்மாநகராட்சி ஆணையர்ஆகியோர் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் எந்தெந்த பகுதியில் பாதிப்பு இருக்குமோ அங்கு தேவையான மாற்று ஏற்பாடுகளைசெய்துள்ளனர் என்றும்ஆக்கிரமிப்புகள் இருந்தால்அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டுஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.மேலும் கொரோனா நோய் தொற்றை பொருத்தவரை கேரளாவில் இருந்து வருபவர்களை கண்காணித்து வருகிறோம். விமான நிலையம்ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பயணிகளையும் கண்காணித்து வருகிறோம். பொங்கல் பண்டிகையையொட்டிமதுபான விற்பனைக்கு இலக்கு எதுவும்நிர்ணயிக்கப்படவில்லை என கூறிய அவர்டாஸ்மாக்கில் வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை எனவும் மது குடிப்பவர்கள் வேறு எங்கும் போகக்கூடாது என்பதை மட்டும் கண்காணித்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
இதேபோல்டெட்ரா பாக்கெட் குறித்துஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதன் பிறகு தான் முடிவு எடுப்போம் எனவும் இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது எனவும் தெரிவித்தார்.வீட்டுவசதி வாரித்தின் கீழ்பத்திரம் இல்லாமல் இருக்கும் வீடுகளையாரிடம் நாங்கள் ஒப்படைப்பது என்பது குறித்து நீதிமன்ற வழிகாட்டுதல் படிநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் முத்துசாமி இவ்வாறு தெரிவித்தார்.பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.