கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இராமகிருஷ்ணா தனியார் கல்லூரியில், வள்ளி கும்மி, ஒயிலாட்டம் என பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/pongal-celebrations-x2.jpeg)
தைத்திருநாளம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேத் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/pongal-celebrations-x1.jpeg)
அதன் ஒரு பகுதியாக கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இராமகிருஷ்ணா தனியார் கல்லூரியில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/pongal-celebrations-3.jpeg)
இதில் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் பண்டிகை கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர்.
காலையிலேயே பொங்கல் வைத்து வழிபட்டதை தொடர்ந்து வள்ளி கும்மி ஒயிலாட்டம் மற்றும் மேலைநாட்டு நடனங்கள் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வள்ளி கும்மி நடனமும் ஒயிலாட்டமும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/pongal-celebrations-x4.jpeg)
அதுமட்டுமின்றி பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
மேலும் மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான்