/indian-express-tamil/media/media_files/2025/10/14/coimbatore-3-2025-10-14-19-35-57.jpg)
Coimbatore
கோவை:
வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோவை ரயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடமைகளைத் தீவிரமாகப் பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வரும் 20-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு உட்பட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களைப் பொதுப் போக்குவரத்து சாதனங்களான ரயில்களில் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொழில் நகரமான கோவையில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருவதால், இங்கு இருந்து வெளியூர்களுக்கும், வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கும் பட்டாசுகள் கொண்டு செல்வதைத் தடுக்கும் நோக்கில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பட்டாசு உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்கிறார்களா என்பதை அறிய, பயணிகளின் உடைமைகள் ஒவ்வொன்றையும் போலீசார் தீவிரமாகப் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர்.
ரயில் மூலம் தடையை மீறிப் பட்டாசுகளைக் கொண்டு சென்றால், அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே மற்றும் காவல் துறை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு இந்தச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.