கோவை, வடவள்ளி லாலி ரோடு பகுதியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் உள்ளது. இங்கு ஆயிரக் கணக்கான மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர். பல்கலைக் கழகம் அமைந்துள்ள சாலை மருதமலை செல்லுகின்ற முக்கிய சாலையாகவும் உள்ளது. இந்த சாலையை, நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த முக்கிய சாலையில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக மழை நீர் சாலையில் தேங்கி உள்ளது. மேலும் அங்குள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் நேற்று அதிகபட்சமாக 6.86 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது.
இதேபோல், பல்கலைக் கழகத்தின் உழவர் நலத் துறை ஆய்வகங்களில் மழைநீர் புகுந்துள்ளது. இந்த மழை நீர் சாலை முழுவதும் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் வெள்ளத்தில் தத்தளித்து வாகனத்தை சிரமத்துடன் ஓட்டி கடந்து செல்கின்றனர். தண்ணீர் வெளியேற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“