Coimbatore News in Tamil: கோவையில் நேற்று சாய்பாபா காலனி துடியலூர் கவுண்டம்பாளையம் உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழக வழி தடம் எண் "4m" இந்த பேருந்து உக்கடம் பகுதியில் இருந்து துடியலூர் செல்கிறது.
மழையின் நடுவே ஓடும் இந்த பேருந்தில் மழைநீர் உள்ளே ஊற்றாக வழிந்துடுகிறது இதனால் பொதுமக்கள் இருக்கையில் உட்காராத முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஷவர் குளியல் போன்று நீர் ஊற்றாக வழிகிறது இது போன்ற பேருந்துகளை உடனடியாக அரசு செப்பனிட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil