/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-06T141316.375.jpg)
சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் இரு தினங்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக நீர்மட்டம் ஐந்து அடியாக உயர்ந்துள்ளது.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை சிறுவாணி, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அரை அடியாக இருந்த சிறுவாணி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் இரு தினங்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக நீர்மட்டம் ஐந்து அடியாக உயர்ந்துள்ளது. சிறுவாணி அணை பகுதியில் 122 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில் அணையின் அடிவாரப் பகுதியில் 58 மில்லி மீட்டர் நீர் பதிவானது.
49 அடி கொண்ட சிறுவாணி அணையின் நீர்மட்டம் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் 5 அடி உயர்ந்துள்ளது. இதனால் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு வாய்ப்பு குறைவு என குடிநீர் வடிகால் அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளார்கள்.
#VIDEO || தொடர் கனமழை... 5 அடிஉயர்ந்த சிறுவாணி அணையின் நீர்மட்டம்!https://t.co/gkgoZMHWlc | #Coimbatore | #SiruvaniDam | 📹 @rahman14331pic.twitter.com/PDGhfdzxfh
— Indian Express Tamil (@IeTamil) July 6, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.