/indian-express-tamil/media/media_files/2024/11/03/oWIF0H7fn1wrRqb49x9G.jpg)
கோவை மேட்டுப்பாளையத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக மிக தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மேட்டுப்பாளையம் சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் சங்கர் நகர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று மின் கம்பங்கள் சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தது.
இதனை அடுத்து மின் கம்பங்கள் சாய்ந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மின் வாரியத்துக்கு தகவல் கொடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோவையில் சூறைகாற்றுடன் கனமழை: 3 மின் கம்பங்கள் சாய்ந்தன; போக்குவரத்து பாதிப்பு#Rain | #coimbatorerainspic.twitter.com/8XK8eGqQtk
— Indian Express Tamil (@IeTamil) November 3, 2024
மேலும் மின் கம்பங்கள் அருகில் இருந்த சாலையோர மரங்களும் முறிந்து விழுந்த நிலையில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
மின் கம்பங்கள் சாய்ந்து சாலையின் நடுவே விழுந்ததால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.