/tamil-ie/media/media_files/uploads/2022/08/New-Project25.jpg)
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு ஆண்கள் அழகுநிலையத்துக்கு சென்றார். பின்னர் அவர் முகத்தை அழகுபடுத்த நீராவி பாத் எடுத்துள்ளார். அப்போது கவனக்குறைவால் கொதித்துக்கொண்டு இருந்த வெந்நீர் அந்த மாணவரின் முகத்தில் பட்டதால் வெந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/IMG_20220821_100617.jpg)
இதனால் மாணவர் வலியால் அலறி துடித்தார். உடனே அங்கிருந்த ஊழியர் சாதாரண கிரீமை எடுத்து அந்த காயத்தில் போட்டுவிட்டு மாணவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு சென்றார். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கடை உரிமையாளர் சஞ்சய்தாஸ், ஊழியர் வித்யாதரன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.