/tamil-ie/media/media_files/uploads/2023/06/indian-express-57.jpg)
Coimbatore
Coimbatore News in Tamil: ரஷ்யா நாட்டைச் சேர்ந்த பெர்லீன் ஷெரில் என்பவர் கஞ்சா வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு பொள்ளாச்சி ஆனைமலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள இன்றியமையாத பண்டகங்கள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக பெர்க்ளீன் ஷெரிலை ஆஜர்ப்படுத்த நேற்று காலை காவல்துறையினர் கொண்டு வந்தனர். அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி இருந்த நிலையில், பிற்பகல் பசிப்பதாக கூறி காவல் துறையினரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, திடீரென நீதிமன்றத்தில் இருந்து காவலர்களை விட்டு ஓடிச் சென்றார். நல்வாய்ப்பாக சிறிது தூரத்திலேயே அவரை பிடித்த காவலர்கள், நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கிக் கொடுத்து சமாதானம் படுத்தினர்.
#Video || பசிப்பதாக கோர்ட்டுக்கு வந்த வெளிநாட்டு கைதி தப்பியோட்டம்... வளைத்து பிடித்து உணவு வாங்கி கொடுத்த போலீசார்!https://t.co/gkgoZMIuaK | #Coimbatore | 📹@rahman14331pic.twitter.com/pbmsi5LT54
— Indian Express Tamil (@IeTamil) June 14, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.