Advertisment

காவிரி பிரச்னை; தி.மு.க கூட்டணி தர்மம் பார்க்கக் கூடாது: கோவையில் சசிகலா பேட்டி

திமுகவிற்க்கு வாக்களித்ததால் மக்கள் மிகவும் சிரமாக உள்ளனர்.அது மாற வேண்டுமென்றால் எங்கள் ஆட்சி வந்தால் மட்டுமே முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore

Sasikala

திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை செல்லும் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்களை அவர் கூறியதாவது, பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் அழைத்துள்ளார்கள். சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

வாகன பிரச்சாரம் பொதுக்கூட்டம் போன்றவை உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவில் இணைய வாய்ப்பு உள்ளது. ஒருங்கிணைக்கும் முயற்சி நன்றாக போகிறது.

மகளிர் உரிமை தொகை அறிவிப்பில், நிதி நிலைமை அவர்களுக்கு நன்றாகத் தெரியும். திமுக வாக்குறுதியில் தெரிந்தே கொடுக்க முடியாததை கொடுக்கிறேன் என சொல்லியது மக்களை ஏமாற்றும் செயல்.

அதிமுக ஜெயலலிதா இருக்கும் போது கட்சி எப்படி இருந்தது. இப்போது அந்த நிலைமை இருக்கிறதா  என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன். அதிமுகவில் அனைவரையும் ஒன்று சேர்ப்பதே எனது பணி.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர மன்னிப்பு கடிதம் கொடுத்ததாக தெரியவில்லை. ஓபிஎஸ்.சின் பாஜக கூட்டணி கருத்து அவரது விருப்பம் அவரது நிலைப்பாடு. ஓபிஎஸ் உடன் விரைவில் சந்திக்க வாய்ப்பு உள்ளது.

96 இல் இருந்து அமலாக்கத்துறை விசாரணைகள் நடைபெறுகிறது. என்னை விசாரித்த போதெல்லாம் நான் ஒத்துழைப்பு கொடுத்தேன்.

பா. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை விசாரித்தனர். 11:30 க்கு கைது செய்தனர்.

ஆனால் என் குடும்பத்தினர் அமைதியாக இருந்தனர். அப்போது திமுக அரசு எங்கள் குடும்பத்தை சிறையில் அடைத்தனர். ஆனால் நாங்கள் பெரிதுபடுத்தவில்லை .

ஆனால் அதே திமுக அரசில்அமலாக்கத்துறை விசாரணையின் போது பெண் அதிகாரியை அடிக்கிறார்கள்.

தமிழக அரசில் இருந்து வரும் அதிகாரிகளுக்கு ஒரு நியாயம் மத்திய அரசிலிருந்து வரும் அதிகாரிகளுக்கு ஒரு நியாயமா? அமைச்சராக இருப்பவர்களே இப்படி வழிகாட்டு முறைகளை காண்பித்தால் மற்றவர்களை எப்படி கண்ட்ரோல் செய்ய முடியும்.

சுதந்திரத்திற்குப் பின்பு தனிப்பட்ட நபருக்காக முதல்வர் அமர்ந்து பேசுவது இதுதான் முதல் முறை. மக்கள் பிரச்சினையை பின்னுக்கு தள்ளி விட்டனர். அவர்கள் பிரச்சினையை தான் பார்க்கின்றனர்.

இந்த மாதிரி விஷயங்களில் சும்மா இருக்க முடியாது. நான் அம்மாவிடம் இருந்தவர். ஆகவே நான் கேட்பேன்.

உங்கள் மீது தவறில்லை என்றால் சொல்லுங்கள். உடனே மத்திய அரசின் மீது குறை சொல்கிறீர்கள். மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம். வந்த மூன்று வருடத்தில் எதையும் பார்க்கவில்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கா? பெண்கள் வெளியே வர முடியவில்லை. எங்கு பார்த்தாலும் டாஸ்மாக். 24 மணி நேரமும் விற்பனை. லைசன்ஸ் இல்லாத பார்கள் நடைபெறுகிறது. திமுக அரசை பேச பத்திரிகைக்காரர்கள் பயப்படுகின்றனர்.

விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்ட நீங்கள் விவசாயம் சம்பந்தமான முடிவுகளை சரியாக எடுக்க வேண்டும் அல்லவா.

காவிரி தண்ணீர் பிரச்சனையில் ஜீன், ஜீலை 40 டிஎம்சி தண்ணீர் வர வேண்டும். ஆனால் 3 டிஎம்சி  கொடுத்துள்ளனர். பயிர்கள் காத்திருக்குமா?

மேட்டூரில் தண்ணீர் எவ்வளவு இருக்கு என்பதை தெரியாமல், இஷ்டத்திற்கு பப்ளிசிட்டி செய்கிறார். டெல்டா மாவட்ட விவசாயிகள் தண்ணீர் வந்து விடும் என பயிரை போட்டு விட்டனர். ஆனால் செடி கருகும் நிலையில் உள்ளது. மேட்டூரில் தண்ணீர் குறைவாக உள்ளது. இதில் விவசாயி நிலமை என்னவாகும்.

கர்நாடகாவில் கூட்டணி கட்சி தான் உள்ளது. கூட்டணி தர்மத்தை பார்த்தால் தமிழ்நாட்டு ஜனங்களுக்கு நல்லது செய்ய முடியாது. கொடுக்கவில்லை என்றால் சுப்ரீம் கோர்ட் செல்லுங்கள். ஜெயலலிதா போல சுப்ரீம் கோர்ட் சென்று செயல்பட வேண்டும்.

எங்களுக்கு தேவை மக்கள். மக்களுக்கு தேவையானதை நாங்கள் செய்வோம். அம்மாவை போல எனது பயணம் இருக்கும்.

பி.டி.ஆர் - எட்டு மாதத்திற்கு முன்பு சொன்னார் டாஸ்மாக்கில் பணம் வருகிறது ஆனால் எங்கே செல்கிறது என தெரியவில்லை என்று. நிதி அமைச்சர் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களுக்கு கெடுதல் இல்லாமல் ஆட்சி நடத்த முடியும் ,அதை நான் செய்து காட்டுவேன்.

அரசாங்க ஊழியர்களுக்கு முறையாக சம்பளம்  உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. பத்து நாள் 15 நாள் ஆகிறது. காவல்துறையில் சம்பளம் 20 தேதியாகிறது. வெளியில் போகும் பணத்தை நிறுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும். நிர்வாகத் திறமை இல்லாத அரசாக உள்ளது.

திமுகவிற்கு வாக்களித்ததால் மக்கள் மிகவும் சிரமாக உள்ளனர. அது மாற வேண்டுமென்றால் எங்கள் ஆட்சி வந்தால் மட்டுமே முடியும்.

தமிழகத்தில் சிறந்த எதிர்கட்சி அதிமுக தான். இவ்வாறு அவர் பேசினார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment