Advertisment

ரயில் ஏ.சி பெட்டியில் இருந்து கொட்டிய மழை நீர்: கோவை சதாப்தி பயணிகள் அவதி

சென்னையில் இருந்து கோவை வந்த சதாப்தி ரயிலில் ஏ.சி பெட்டி மேற்கூரிலிருந்து இருந்து மழை நீர் கசிந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

author-image
WebDesk
New Update
Ac rain.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.சி, நான்-ஏ.சி உள்பட பெட்டிகள் உள்ளன.

Advertisment

இதில் நேற்று 2 அடுக்கு ஏ.சி பெட்டியில் பயணிகள் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது பெய்த கனமழையில் ரயிலின் மேற்கூரை வழியாக ஏசி பெட்டிக்குள் மழைநீர் கொட்டியது. இதனால், அங்கிருந்த பயணிகள் தூங்க முடியாமல் உட்கார்ந்தே பயணித்தனர். இதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.  

மேலும் மதியம் 2:30 மணிக்கு கோவை ரயில் நிலையம் சென்றடைய வேண்டிய இந்த ரயில் மாலை 4:15 மணிக்கு கோவை வந்தடைந்தது. இரண்டு முப்பது மணிக்கு ரயில் வந்தடையும் என தனியார் வாகன ஓட்டிகளும், ரயில் பயணிகளின் உறவினர்களும் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தனர். இதனால் வயதான பயணிகள் சரியான நேரத்திற்கு மதிய  உணவு எடுத்துக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Train
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment