பிரதமரின் ’ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு- விசாரணை நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி

புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவரது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவரது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

கோவையில், சாய்பாபா கோயிலில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை நேற்று (மார்ச் 18) பிரதமர் மோடி கலந்து கொண்ட பிரம்மாண்ட வாகனப் பேரணி நடந்தது.

Advertisment

பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் சாலையின் இருபுறங்களிலும் பாஜக தொண்டர்கள் குவிந்து மலர் தூவி வரவேற்றனர். செல்லும் வழியில், நாதஸ்வரம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் சாய்பாபா காலனி பகுதியில் பிரதமர் மோடியை வரவேற்க அரசு பள்ளி மாணவர்கள் சீருடையுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment
Advertisements

அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர்  கிராந்திகுமார் பாடி அவரது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தொழிலாளர் துறை இணை ஆணையர் ஆகியோரிடம் அறிக்கை கேட்கப்பட்டு இருப்பதாகவும் விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: