பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
நாம் தமிழர் கட்சி கோவை மண்டல செயலாளர் அப்துல் வஹாப் மற்றும் நிர்வாகிகள் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் துரைமுருகன் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரின் வளர்ச்சியையும், நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியையும் பொறுத்துக் கொள்ள முடியாத பாஜ.க-வை சேர்ந்த திருச்சி சூர்யா சமூக வலைதளத்தில் சாட்டை துரை முருகன் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ள பெண்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குறித்து அவதூறு பரப்பி வருகிறார்.
அவரை கண்டிக்காமல் மாநில தலைவர் அண்ணாமலை ஊக்கப்படுத்தி வருகிறார். எனவே, திருச்சி சூர்யா, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
சீமான் பற்றி அவதூறு கருத்து: பா.ஜ.க நிர்வாகி மீது கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார்
திருச்சி சூர்யா, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.
திருச்சி சூர்யா, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.
சீமான் பற்றி அவதூறு கருத்து: திருச்சி சூர்யா, அண்ணாமலை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
நாம் தமிழர் கட்சி கோவை மண்டல செயலாளர் அப்துல் வஹாப் மற்றும் நிர்வாகிகள் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் துரைமுருகன் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரின் வளர்ச்சியையும், நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியையும் பொறுத்துக் கொள்ள முடியாத பாஜ.க-வை சேர்ந்த திருச்சி சூர்யா சமூக வலைதளத்தில் சாட்டை துரை முருகன் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ள பெண்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குறித்து அவதூறு பரப்பி வருகிறார்.
அவரை கண்டிக்காமல் மாநில தலைவர் அண்ணாமலை ஊக்கப்படுத்தி வருகிறார். எனவே, திருச்சி சூர்யா, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.