இரும்பு பைப்புகள் ஏற்றி வந்த சரக்கு லாரிக்குள் புகுந்த மலைப்பாம்பை நீண்ட போராட்டத்திற்கு பின் மதுக்கரை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்
கோவை மாவட்டம் வாளையார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியில் மலைப்பாம்பு புகுந்தது. இந்த லாரி கொச்சியில் இருந்து ஆந்திராவிற்கு இரும்பு பைப்புகளை ஏற்றி சென்றது ஆகும்.
இந்த நிலையில், மலைப்பாம்பை மீட்க வனத்துறை பாம்பு பிடி வீரர்கள் முயற்சி மேற்கொண்டனர். தொடர்ச்சியான நீண்ட போராட்டத்திற்கு பின் மதுக்கரை வனத்துறையினர் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“