கோவை டவுன்ஹால் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு விழா நடைபெறும். அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்கு வரும் மக்கள் கத்தி போடும் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
கோவை பூ மார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இந்த கத்தி போடும் திருவிழா ஊர்வலம் துவங்கி டவுன்ஹால் பகுதியில் உள்ள சவுடேஸ்வரி கோவில் வந்து அடைந்தது.
/indian-express-tamil/media/media_files/hOZtndXuMfUoAOoPE4n7.jpeg)
இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் கை, உடல்களில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர். இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது. அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர்.
இந்த திருமஞ்சன பொடியை வைத்தால் 3 நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பின்னர் அம்மனுக்கு விசேஷ பூஜை நடத்தப்பட்டு தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
/indian-express-tamil/media/media_files/4AtyYrl9fK5XmyEmYald.jpeg)
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“