மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்; கோவையில் பரபரப்பு

கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அவரது நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 3 குற்றவாளிகளை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அவரது நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 3 குற்றவாளிகளை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

author-image
WebDesk
New Update
covai shooting

மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்; கோவையில் பரபரப்பு

கோவையில், கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அவரது நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 3 குற்றவாளிகளை, தனிப்படை போலீசார் இன்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்த சம்பவத்தின் போது குற்றவாளிகள் தாக்கியதில் தலைமை காவலர் ஒருவரும் காயமடைந்தார்.

Advertisment

பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கொடூரம்

நேற்றிரவு, (நவ.3) கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஆளரவமற்ற பகுதியில், கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் காரில் தனிமையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மேலும், அவருடன் இருந்த இளைஞரையும் அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு, அந்த கும்பல் தப்பியோடியது. இந்த கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தனிப்படை தீவிரம் மற்றும் துப்பாக்கிச் சூடு

குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், குற்றவாளிகள் 3 பேரும் கோவை துடியலூர் அடுத்த வெள்ளகிணர் பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் இன்று அதிகாலை அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர். குற்றவாளிகளைப் பிடிக்க முயன்றபோது, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசாரைத் தாக்கினர். இந்த திடீர் தாக்குதலில், தலைமைக் காவலர் சந்திரசேகர் என்பவருக்கு இடதுகை மணிக் கட்டில் பலத்த வெட்டு விழுந்தது.

Advertisment
Advertisements

இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களைத் தடுக்கவும், மேலும் அசம்பாவிதங்கள் நடப்பதைத் தவிர்க்கவும், பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் குற்றவாளிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

குற்றவாளிகள் பின்னணி

போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 3 குற்றவாளிகளின் கால்களிலும் குண்டு பாய்ந்தது. குணா என்பவருக்கு ஒரு காலிலும், சதீஷ் (எ) கருப்பசாமி மற்றும் கார்த்திக் (எ) காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் 2 கால்களிலும் குண்டு பாய்ந்தது. பிடிபட்ட மூவரிடமும் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் கோவையில் இருகூர் பகுதியில் வீடு எடுத்து தங்கி, கட்டிட வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் சதீஷ் மற்றும் கார்த்திக் இருவரும் சகோதரர்கள் ஆவர். மேலும், இவர்கள் 3 பேர் மீதும் ஏற்கனவே ஒரு கொலை வழக்கு, வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு கொடூர வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை

காயமடைந்த குற்றவாளிகள் 3 பேரும், அரிவாள் வெட்டில் காயமடைந்த தலைமை காவலர் சந்திரசேகரும், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: