/indian-express-tamil/media/media_files/5m1uHZjgJcGSQidU97i5.jpeg)
Coimbatore
கோவை தொண்டாமுத்தூர் ரங்கநாதன் கல்லூரியில் NET தேர்வு எழுத வந்தவர், வெள்ளி அரைஞான் கயிறை கழட்ட மறுத்ததால், அவரது இடுப்பில் டேப் ஒட்டப்பட்டு பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ரங்கநாதன் பொறியியல் கல்லூரியில் NET தேர்வு நடைபெற்று வருகிறது.
UGC சார்பில் நடத்தப்படும் இந்த NET தேர்வில் முதுகலை படித்து முடித்த மாணவர்களும், கல்லூரி விரிவுரையாளர்களும் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.
தேர்வு எழுத வருபவர்களிடம் , நீட் தேர்விற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை போல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக பெண்கள் கம்மல், செயின், மோதிரம், கொலுசு, தாலி, மெட்டி, தலைக்கு கிளிப் போன்றவை அணிந்து செல்ல கூடாது எனவும், ஆண்கள்வெள்ளி அரைஞான் கயிறு உட்பட எதுவும் அணிந்து செல்ல கூடாதுஅறிவுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் NET தேர்விற்கு வந்த கல்லூரி விரிவுரையாளர் ஒருவரை வெள்ளி அரைஞான் கயிறை கழட்டுமாறு கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.ஆனால் UGC விதிமுறைகளில் இல்லாத ஒன்றை செய்ய முடியாது என கூறி அவர்கழட்ட மறுத்துள்ளார்.
இதனையடுத்துகல்லூரி விரிவுரையாளர் அணிந்து இருந்த பனியன் மேல் டேப் ஓட்டிய பின்பே கல்லூரி நிர்வாகம், தேர்வு எழுத அனுப்பியுள்ளனர்.
இதேபோன்று தேர்வுக்கு வந்த மாணவியர் பலரும் தலைவிரி கோலமாய் அணிகலன்கள் அணியாமல் எழுதியதாக தேர்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.இன்றும் அந்த கல்லூரியில் NET தேர்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறt.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.