Advertisment

தி.மு.க ஆட்சிக்கு முன் கைத்தறி துறையில் ரூ.9 கோடி நஷ்டம்: அமைச்சர் ஆர். காந்தி

'தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்கும் போது கைத்தரி துறையில் ரூ.9 கோடி அளவிற்கு நஷ்டத்தில் இருந்தது' என கைத்தரி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore: TN Handloom and Textile Minister R Gandhi Latest press meet Tamil News

Tamil Nadu Handloom and Textile Minister R Gandhi press meet in Coimbatore

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

கோவை சாய்பாபா காலணியில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கைத்தரி மற்றும் கோ- ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களை கைத்தரி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

publive-image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.காந்தி கூறியதாவது:-

கைத்தரி முன்னேற்றத்திற்கு கடந்த 1.5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு முக்கியத்துவம் வழங்கியும், நெசவாளர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மேலும் முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள கைத்தரி மற்றும் கோ- ஆப் டெக்ஸ் விற்பனையகங்களை நவீனமயமாக்கி வருகிறோம். பெங்களூர் நிறுவனம் மூலம் 500 புதிய வடிவமைப்புகளை தற்போது உருவாக்கியுள்ளோம். திமுக ஆட்சிப் பொறுப்பேற்கும் போது கைத்தரி துறையில் ரூ.9 கோடி அளவிற்கு நஷ்டத்தில் இருந்தது.

publive-image

தற்போது சுமார் ரூ.20 கோடி விற்பனையை கைத்தரித்துறை செய்து வருகிறது. அதில் ரூ.10 கோடிக்கு விற்பனையகங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் விரும்பும் உடைகள் மற்றும் நெசவாளர்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். நாளை முதல் முறையாக ஊட்டியில் தோடா மக்களுக்கான கூட்டுறவு சொசைட்டி துவங்க உள்ளோம். அதன் மூலம் அவர்களது தயாரிப்புகளையும் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய உள்ளனர்.

நெசவாளர்கள் குடும்பத்துடன் சிரமங்களிடையே நெசவு செய்து வருகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு 10 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் 10 சதவீத உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 12 தேசிய பஞ்சாலைகளில் தற்போது 6 தான் உள்ளது. இந்தியாவில் தமிழகம் ஜவுளித்துறையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட ஜவுளி பூங்கா 5 பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முதல்வரின் முயற்சியால் தமிழகத்திற்கும் ஜவுளி பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசுகையில், "தேசிய பஞ்சாலை விவகாரம் குறித்து அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்ட கொள்கை முடிவு வெளியிடப்படும்" என தெரிவித்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Dmk Coimbatore Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment