Coimbatore, Madurai, Trichy News Updates: கடலூர் சிப்காட் அருகே லாரி மீது வேன் மோதி விபத்து; 20 பேர் காயம்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tanker

ஈஸ்டர் பெருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

Advertisment

ஈஸ்டர் பெருநாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருக்கக் கூடிய தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குறிப்பாக, வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் திருச்சியில் உள்ள உலக மீட்பர் பசிலிக்கா தேவாலயத்தில் நடத்தப்பட்ட பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Apr 20, 2025 20:07 IST

    கடலூர் சிப்காட் அருகே லாரி மீது வேன் மோதி விபத்து; 20 பேர் காயம்

    காஞ்சிபுரத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கும்பகோணம் திரும்பியபோது விபத்து ஏற்பட்டது. சாலை நடுவில் இருக்கும் பூ செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டதில், காஞ்சிபுரத்தை சேர்ந்த 20 பேர் காயமடைந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



  • Apr 20, 2025 18:08 IST

    மின்சார ரயில் சக்கரத்தில் புகை - பயணிகள் பீதி

    விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் விழுப்புரம் பயணிகள் மின்சார ரயில் வழக்கம் போல் மதுராந்தகம் ரயில் நிலையத்திற்கு காலை 6.35 மணிக்கு வந்தது. இதையடுத்து ரயில் மீண்டும் புறப்பட்டபோது, சக்கரத்தில் புகை கிளம்பி உள்ளது. இதையடுத்து பயணிகள் ஓட்டுனருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. ஓட்டுநர் கீழே இறங்கி பார்த்தபோது பிரேக் ஷூ சக்கரத்தில் இறுக்கமாக பிடித்திருந்தது தெரியவந்தது இதையடுத்து அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பிரேக் கட்டையை அகற்றினர் இதைத் தொடர்ந்து 40 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.



  • Advertisment
    Advertisements
  • Apr 20, 2025 18:01 IST

    தனியார் வங்கி பெயரில் போலி லிங்க் அனுப்பி ரூ.80,000 மோசடி

    புதுச்சேரியில், தனியார் வங்கி பெயரில் போலி லிங்க் அனுப்பி,  4 பேரிடம் ரூ.80 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது குறித்து மர்மகும்பலை தேடி வரும் சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். வாட்ஸ்-அப்பில் வங்கிகள் பெயரில் வரும் போலி லிங்கை தொட வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.



  • Apr 20, 2025 17:45 IST

    செங்கல்பட்டு: மின்சாரம் தாக்கி விவசாயி பலி

    செங்கல்பட்டு அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்த விவசாயி வேலு மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். உயிரிழந்த விவசாயி உடலை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.



  • Apr 20, 2025 17:44 IST

    அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழப்பு

    திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அதிக ரத்தப்போக்கு காரணமாக தாய் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.



  • Apr 20, 2025 17:31 IST

    மதுரை சித்திரை திருவிழா: சேகர்பாபு ஆய்வு

    சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கி மே மாதம் 12ஆம் தேதி வரை விமர்சையாக நடைபெற உள்ளது. திருவிழாவில் கலந்துகொள்ள உள்ள பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தர வேண்டும், எந்த ஒரு இடையூறும் இல்லாமல் திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டும் என கோயில் நிர்வாக ஊழியர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுரைகளை வழங்கினார்.

     



  • Apr 20, 2025 16:21 IST

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம்

    விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். பைன் காடுகள், குணா குகை, மோயர் சதுக்கம் பகுதியில் கூட்டம் அலைமோதுகிறது.

     



  • Apr 20, 2025 16:02 IST

    மதுரையில் ஆகஸ்ட் முதல் மின்சார பேருந்துகள்

    மதுரையில் ஆகஸ்ட் மாதம் முதல் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சென்னையில் மின்சார பேருந்துகள் தொடங்கி வைத்த பிறகு, மதுரையிலும் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.



  • Apr 20, 2025 15:51 IST

    ஒரே கல்லால் செய்யப்பட்ட 18 அடி உயர காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒரே கல்லால் செய்யப்பட்ட 18 அடி உயர காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் காளியம்மன் சிலை மீது புனித தீர்த்தம் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்



  • Apr 20, 2025 14:36 IST

    மதுரை ஆனையூரில் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த இளைஞர் வெட்டிக்கொலை

    மதுரை ஆனையூரில் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் நடராஜன் கூடல்புதூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்



  • Apr 20, 2025 14:11 IST

    எனது போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது - நயினார் நாகேந்திரன்

    எனது போன் உட்பட பா.ஜ.க.,வினரின் போன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன. நாங்கள் பேசுவதை தி.மு.க அரசு கண்காணித்து வருகிறது என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகார் தெரிவித்துள்ளார்



  • Apr 20, 2025 13:38 IST

    பூக்குழியில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

    அருப்புக்கோட்டையில் 2 நாட்கள் முன்பு ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர் தவறி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்



  • Apr 20, 2025 13:12 IST

    8 கி.மீ நடந்து சென்று ஆய்வு மேற்கொண்ட திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்

    திண்டுக்கல் மாவட்டத்தில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெள்ளக்கவி கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இதற்காக சுமார் 8 கி.மீ நடந்து சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.



  • Apr 20, 2025 12:42 IST

    வாணியம்பாடியில் நடைபெற்ற அ.தி.மு.க போராட்டத்தில் தள்ளுமுள்ளு

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே அமைச்சர் பொன்முடியை கண்டித்து அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் பொன்முடியின் படத்தை காவல்துறையினர் பறிக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



  • Apr 20, 2025 10:48 IST

    சித்திரை திருவிழா - அமைச்சர்கள் ஆய்வு

    மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆழ்வார்புரம் பகுதியில் அமைச்சர்கள் சேகர் பாபு, எ.வ.வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆய்வு

    சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 8ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு மே 12ம் தேதி நடைபெறுகிறது



  • Apr 20, 2025 10:19 IST

    குப்பை கொட்டுவதில் வெடித்த தகராறு.. லாரியை வைத்து காரை இடித்த பக்கத்து வீட்டுக்காரர்!

    சேலம் அம்மம்பாளையத்தில் வசிக்கும் அனிதா என்பவர் பக்கத்து வீட்டருகே குப்பை கொட்டியதால் மோதல் வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பூபதி உறவினரை வைத்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றியுள்ளார். ஆத்தூர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • Apr 20, 2025 09:50 IST

    குடிநீரில் கழிவுநீரால் 3 பேர் பலி- இபிஎஸ் கண்டனம்

    திருச்சியில் கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 3 பேர் இறந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திமுக அரசு நடவடிக்கை எடுக்காததன் விளைவே இந்த உயிரிழப்புகள் என இபிஎஸ் கூறியுள்ளார். அத்தியாவசியாமான குடிநீரைக் கூட சுகாதாரமாக அளிக்க முடியாத அரசு இருந்து என்ன பயன்? உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு திமுக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.



  • Apr 20, 2025 09:47 IST

    "நான் வைகோவின் சேனாதிபதி"

    நான் திராவிட இயக்கப் போர்வாள், வைகோவின் சேனாதிபதி என் விரலில் வைகோ முகம் பதித்த மோதிரமும் சட்டைப் பாக்கெட்டில் அவரின் புகைப்படமும் தான் அதற்கு அடையாளம் என மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கூறியுள்ளார்.



  • Apr 20, 2025 09:46 IST

    ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

    தொடர் விடுமுறை தினத்தை ஒட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 



  • Apr 20, 2025 09:45 IST

    கஞ்சா ஹோம் டெலிவரி - தாய், மகன் கைது

    சேலம் ஓமலூரில் கஞ்சாவை வீட்டுக்கே சென்று விற்பனை செய்த தாய், மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூங்கொடி அவரது மகன் சந்தோஷ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டத். 



  • Apr 20, 2025 09:28 IST

    இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், மகேஷ் குமார் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.



Tamil News Live Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: