/indian-express-tamil/media/media_files/VqVajM2VHrRVWLtAMsWr.jpg)
தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில்
கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் - திருச்சி இடையே நாளை (ஏப்ரல் 29) முதல் ஜூன் 29-ஆம் தேதிவரை இருமார்க்கத்திலும் வாரத்தில் 5 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து அதிகாலை 5:35 மணிக்கு புறப்பரம் ரயில், மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து மதியம் 3:45 மணிக்கு புறப்படும் ரயில், திருச்சிக்கு இரவு 10:40 மணிக்கு சென்றடையும்.
-
Apr 28, 2025 19:53 IST
ஓசூரில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் நகைகள் கொள்ளை
ஓசூரில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 28, 2025 17:26 IST
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: மே 13-ம் தேதி தீர்ப்பு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13-ம் தேதி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு, அரசு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
-
Apr 28, 2025 17:22 IST
பெரியார் குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய மணப்பாறை பொலீசாருக்கு கோர்ட் உத்தரவு
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் 2024-ல் பெரியார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரில் மணப்பாறை போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
Apr 28, 2025 15:29 IST
சேலம் ரவுடி கொலை வழக்கு - குண்டாஸ் பாய்ந்தது
சேலம் ரவுடி ஜான் சாணக்யா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பூபாலன் மற்றும் சதீஷ் ஆகியோர் மீது குண்டாஸ் பாய்ந்தது
பூபாலன் மற்றும் சதீஷ் ஆகியோர் மீது சேலம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டாஸ்
-
Apr 28, 2025 13:16 IST
கன்னியாகுமரியில் சிறுவன் படுகொலை
கன்னியாகுமரி அருகே மாதவபுரம் பகுதியில் 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் திருவிழாவில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்ததாக கூறப்படும் நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
-
Apr 28, 2025 13:12 IST
Myv3 நிறுவனம் குறித்து புகார் மனு அளிக்க காவல்துறை அறிவுறுத்தல்
Myv3 நிறுவனம் குறித்து புகார் மனு அளிக்குமாறு கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, பணத்தை முதலீடு செய்ததற்கான அசல் ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
-
Apr 28, 2025 13:09 IST
கோயில் திருவிழா காப்பு கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
கரூரில், மல்லையன் கோயில் திருவிழா நடத்துவதற்கு காப்பு கட்டியதை கண்டித்து ஒரு தரப்பினர் போராட்டதில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
-
Apr 28, 2025 10:10 IST
தாம்பரம்-திருச்சி இடையே நாளை முதல் சிறப்பு ரயில்
கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-திருச்சி இடையே நாளை முதல் ஜூன் 29 வரை இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து அதிகாலை 5.35க்கு புறப்படும் இந்த ரயில், மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து மதியம் 3.45க்கு புறப்படும் ரயில், இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும். வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
-
Apr 28, 2025 09:44 IST
மீன்பிடித் திருவிழா
மதுரை அரியூர்பட்டியில் சமத்துவ மீன்பிடி திருவிழாவையொட்டி போட்டி போட்டு கொண்டு கிராம மக்கள் மீன்களை பிடித்து சென்றனர்.
-
Apr 28, 2025 09:16 IST
மழை நிலவரம்
கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Apr 28, 2025 09:16 IST
தங்கத்தை பரிசளித்த நிறுவனம்
தஞ்சாவூரில் தூய்மை பணியாளர்களுக்கு தங்கத்தி நிறுவனம் ஒன்று பரிசளித்துள்ளது.
-
Apr 28, 2025 09:10 IST
கஞ்சா கடத்தலில் 3 பேர் கைது
விசாகபட்டினத்தில் இருந்து நாகைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.