/indian-express-tamil/media/media_files/2025/04/29/g9Rrx7ShJiduvyoCU8IU.jpg)
7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் இன்று (ஏப்.29) 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை, நாகை, கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 29, 2025 21:29 IST
தமிழக அரசின் 4 ஆண்டு சாதனைகள் குறித்து நெல்லையில் துண்டு பிரசுரம் வழங்கிய தி.மு.க பிரமுகர்
திமுக தலைமையிலான தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரம் வழங்கும் பெருந்திரள் மக்கள் பிரச்சாரப் பயணம் நெல்லை மாவட்டம் களக்காட்டில் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.சி.ராஜன் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கினார்
-
Apr 29, 2025 17:59 IST
சமூக நீதிக்கான அரசாக செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசு - ஐகோர்ட் பாராட்டு
சமூக நீதிக்கான அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டியுள்ளது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகள் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மாணவிகள் பாதுகாப்பு பற்றி அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
Apr 29, 2025 17:58 IST
ராமநாதபுரம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ.2.56 லட்சம் பணம் பறிமுதல்
ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.2.56 லட்சம் சிக்கியது.
-
Apr 29, 2025 17:50 IST
மதுரை மாவட்டத்தில் கோடை காலப் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை - கலெக்டர் அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில் கோடை கால விடுமுறை நாட்களில் பள்ளி மற்றும் மழலையர் பள்ளிகளில் அனுமதியின்றி பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மதுரை கே.கே. நகர் தனியார் மழலையர் பள்ளியில் 3 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
Apr 29, 2025 16:46 IST
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா
உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயிலின் 18 நாள் சித்திரை திருவிழா, சாகை வார்த்தல் நிகழ்வுடன் இன்று தொடங்கியது. மே 14ம் தேதி சித்திரை தேரோட்டம், 16ம் தேதி பட்டாபிஷேகம் நடக்க உள்ளது.
-
Apr 29, 2025 15:29 IST
பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தற்காலிக உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்த துணை வேந்தர் உத்தரவிட்டுள்ளார்.
-
Apr 29, 2025 14:33 IST
தண்ணீர் தொட்டியில் சிறுமி விழுந்து உயிரிழப்பு - பள்ளிக்கு சீல்
மதுரை, கே.கே. நகரில் பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான விசாரணையை மதுரை கோட்டாட்சியர் ஷாலினி மேற்கொண்டார்.
-
Apr 29, 2025 14:15 IST
காஜா பீடி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
நெல்லை, டவுண் பகுதியில் அமைந்துள்ள காஜா பீடி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய படையினர் உதவியுடன் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
-
Apr 29, 2025 13:07 IST
"முறைகேடு புகாரில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்"
முறைகேடு புகாரில் விசாரணைக்கு சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஒத்துழைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒத்துழைக்கத் தவறினால் கைது செய்து புலன் விசாரணையை முடிக்க காவல் துறைக்கு உத்தரவு; முறைகேடு புகார், வன்கொடுமை வழக்கில் துணைவேந்தருக்கு ஜாமின் வழங்கியதை எதிர்த்து காவல் துறை மனு; அரசு அனுமதி பெறாமல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற அமைப்பை தொடங்கியதாகவும் புகார் அளித்துள்ளனர்.
-
Apr 29, 2025 12:57 IST
சிறுமி உயிரிழப்பு - பள்ளியின் தாளாளர் கைது
மதுரை கே.கே.நகரில் பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்தது தொடர்பாக பள்ளியின் தாளாளரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றது.
-
Apr 29, 2025 12:46 IST
கார் கவிழ்ந்து தாய், மகள் படுகாயம்
சூலூர் அருகே செஞ்சேரி மலை முருகன் கோயிலுக்கு சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - தாய், மகள் படுகாயம் அடைந்துள்ளனர். பார்க்கிங்கில் காரை நிறுத்த முயன்றபோது, பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது
-
Apr 29, 2025 12:44 IST
அவதூறு வழக்கு - நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்
டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர் ஆகியுள்ளார்.
-
Apr 29, 2025 12:39 IST
பள்ளியில் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு
மதுரையில் மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழந்துள்ளது. கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டுவரும் ஸ்ரீ மழலையர் பள்ளியில் படித்துவந்த 4 வயது குழந்தை ஆருத்ரா; விளையாடியபோது மூடப்படாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் | விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு; சம்பவம் நடந்த பள்ளியில் மாநகர தெற்கு துணை ஆணையர் அனிதா தலைமையில் காவல் துறையினர் விசாரணை; பள்ளி உரிமையாளர் வித்யா பத்ரி லட்சுமியை கைதுசெய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 29, 2025 12:22 IST
பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை
மதுரையில் தனியார் மழலையர் பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தைக்கு சிகிச்சை தண்ணீர் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கிய குழந்தை ஆருத்ரா தனியார் மருத்துவமனையில் அனுமதி; கே.கே.நகரில் உள்ள பள்ளியில் காவல் துணை ஆணையர் அனிதா நேரில் விசாரணை நடத்துகிறார்
-
Apr 29, 2025 11:20 IST
மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை விழாவையொட்டி தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தின் முன்பு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினர். கம்பத்தடி மண்டபத்தில் மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடைக்கு தீபாராதனை நடந்தது. மீனாட்சி சுந்தரேசுவரர் காலை, இரவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதியில் வலம் வருவார்
-
Apr 29, 2025 10:50 IST
கூடலூர் அருகே காவல் நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை
கூடலூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நடுவட்டம் காவல் நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று இரவு சுமார் 8 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. ஒவ்வொரு அறையாக சிறுத்தை சென்று வரும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. சிறுத்தை உள்ளே புகுந்ததால் அங்கு இருந்த காவலர்கள் அலறி அடித்து வெளியேறி உள்ளனர். சிறிது நேரம் கழித்து சிறுத்தை அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளது.
-
Apr 29, 2025 10:04 IST
மீனாட்சி திருக்கல்யாண காட்சி கட்டண சீட்டு முன்பதிவு
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் காட்சிக்கு ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகளுக்கான முன்பதிவு 2025 ஏப்ரல் 29 இன்று தொடங்கியது. முன்பதிவு 2025 மே 2 வரை கோவில் இணையதளங்கள் மற்றும் பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் செய்யலாம். பதிவு செய்ய ஆதார், அடையாள அட்டை, மொபைல் எண், இ-மெயில் அவசியம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Apr 29, 2025 09:18 IST
எஸ் ஐ தாக்கி நகை கொள்ளை
புதுக்கோட்டை அருகே எஸ்ஐ கணவரை இரும்பு கம்பியால் தாக்கி நகைகளை திருட்டு. திருமயம் மகளிர் காவல்நிலைய எஸ்ஐ சுமையாபானு வீட்டிற்குள் பின்பக்கம் வழியாக புகுந்த கொள்ளையர்கள் எஸ்ஐ கணவர் நாகசுந்தரத்தை இரும்பு கம்பியால் தாக்கிய 4 பேர் கொண்ட கும்பல் இருவரிடம் இருந்த 10 சவரன் நகையை கழட்டிக் கொடுக்கும்படி மிரட்டியுள்ளனர். எஸ்ஐ சுமையா பானு திருக்கோகர்ணம் காவல்நிலையத்தில் புகார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளனர்.
-
Apr 29, 2025 09:17 IST
மழை நிலவரம்
"தஞ்சை, நாகை, கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, ஆகிய 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும்" என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Apr 29, 2025 09:16 IST
பட்டாசு வெடி விபத்து - இழப்பீடு வழங்க கோரிக்கை
சேலம் கஞ்சநாயக்கன்பட்டி கோயில் திருவிழா வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக எம்எல்ஏ சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Apr 29, 2025 09:15 IST
“பொதுமக்கள் அளித்துள்ள மனுக்களை ஆராய்ந்து விரைவில் நடவடிக்கை” - துரை வைகோ, எம்.பி.
புதுக்கோட்டையில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் மதிய இடைவெளியை தாண்டி திரளான் பொதுமக்கள் பங்கேற்றனர். சுமார் 400 மனுக்கள் பெறப்பட்டு மாலை 5 மணிக்கு இந்த குறைதீர்ப்பு முகாம் முடிவு பெற்றது.
-
Apr 29, 2025 09:14 IST
எஸ்.ஐ கணவரை தாக்கி கொள்ளை
புதுக்கோட்டையில் எஸ்.ஐ கணவரை தாக்கி வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமயம் மகளிர் காவல் நிலையத்தில் சுமையாபானு என்பவர் எஸ்.ஐ ஆக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரது கணவர் நாகசுந்தரத்தை தாக்கி, 10 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Apr 29, 2025 09:14 IST
கூத்தாண்டவர் கோயில் திருவிழா
உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் 18 நாள் சித்திரை திருவிழாவின் முதல் நிகழ்ச்சி இன்று மாலை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.