Coimbatore, Madurai, Trichy News Updates: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
boiled eggs

மேட்டூர் அணை நிலவரம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 2,323 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 107.81 அடியாக அதிகரித்துள்ளது. நீர் இருப்பு 75.333 டி.எம்.சி. ஆக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர், தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.

  • May 02, 2025 23:59 IST

    நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வு

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.4.70ஆக உயர்வு



  • May 02, 2025 20:53 IST

    நீட் தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து: நெல்லை மண்டல போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.

    நெல்லை மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை நடக்கும் நீட் தேர்விற்கு மாணவர்கள் எளிதில் சென்றடையும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என நெல்லை மண்டல போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.



  • Advertisment
  • May 02, 2025 19:58 IST

    சாக்கு மூட்டையில் சடலம் - தொழிலாளி படுகொலை 

    விருதுநகர் மாவட்டம், முஷ்டகுறிச்சியில் உள்ள விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி உடல் கண்டறியப்பட்டுள்ளது. சடலமாக கிடந்தவர், 3 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு சென்ற நாகனேந்தல் கிராமத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி முருகன் என தெரிய வந்த‌து. முருகனை மர்மநபர்கள்‌அடித்து கொலை செய்து, கை கால்களை இறுக்கி சாக்கு முட்டையில் கட்டி வீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், முருகனை கொலை செய்தது யார்? முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா? என காவல்துறை விசாரணை



  • May 02, 2025 19:53 IST

    சித்திரை திருவிழாவின் 4-ம் நாள் நிகழ்வு கோலாகலம்

    மதுரை சித்திரை திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்வாக, பாவக்காய் மண்டபத்திலிருந்து, சித்திரை வீதிகள் வழியாக மீனாட்சி அம்மன் செல்கிறார்.  பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்



  • Advertisment
    Advertisements
  • May 02, 2025 18:47 IST

    காதலை ஏற்க மறுத்த மாணவி மீது வீடு புகுந்து தாக்குதல்

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே காதலை ஏற்க மறுத்த மாணவியை, வீடு புகுந்து தாக்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவி தப்பி ஓடும்போது, ஜெனிஷ் என்ற இளைஞர் விரட்டி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜெனிஷை தேடி வருகின்றனர்



  • May 02, 2025 18:21 IST

    கனமழையால் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு நிறுத்தம்

    நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு நடந்து வரும் பகுதியில் கனமழை பெய்து வருவதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜீப் மூலம் கேரவனுக்கு வந்து, விஜய் காத்திருக்கிறார். இதற்கிடையில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், விஜய்யை காண ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்



  • May 02, 2025 17:59 IST

    மலைப்பாதையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

    குன்னூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



  • May 02, 2025 16:10 IST

    உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதீனம் கார் விபத்து

    உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதீனம் சென்ற கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த மதுரை ஆதீனம் உள்ளிட்ட அனைவரும் எந்த விதமான பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். சைவ மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தருமபுரம் ஆதீனம் வலியுறுத்தியுள்ளார்.



  • May 02, 2025 15:23 IST

    கோத்தகிரி 13வது காய்கறி கண்காட்சி

    கோத்தகிரி நேரு பூங்காவில்  13வது காய்கறி கண்காட்சியுடன் நாளை தொடங்குகிறது கோடை விழா

    2.50 டன் காய்கறிகளை கொண்டு ஜல்லிக்கட்டு காளை, மரகத புறா, கிளிகள், சிலம்பம் உள்ளிட்டவைகளை வடிவமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன



  • May 02, 2025 15:22 IST

    லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஒ கைது

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கணினி பட்டா வழங்க ரூ.3000 வீதம் 25 குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் ரூ.75,000 லஞ்சமாக பெற்ற வீரகநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் கோடீஸ்வரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்து விசாரணை



  • May 02, 2025 15:22 IST

    உதகையில் களைகட்டிய கோடை சீசன்.

    சுட்டெரிக்கும் வெயிலால் ஊட்டிக்கு படையெடுத்துள்ள மக்கள். தாவரவியல் பூங்காவில் கூட்டம் அலைமோதும் நிலையில் பூங்காவில் பூத்துக் குலுங்கும் பல வண்ண மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர்.



  • May 02, 2025 13:31 IST

    பேக்கரியில் வாங்கிய குளிர்பானத்தில் பல்லி

    ஓமலூரில் உள்ள ஒரு பேக்கரியில் வாங்கப்பட்ட 4 குளிர்பானத்தை குழந்தைகள் குடித்தபோது பல்லி இருந்த‌தாக குற்றச்சாட்டு.  குழந்தைகள் வாந்தி எடுத்த‌தும், பாட்டிலில் அரணை, பல்லி செத்து மிதந்த‌தை பார்த்து வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். விற்பனை செய்த கடை, உற்பத்தி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க‌க்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. 



  • May 02, 2025 12:55 IST

    "ஈரோடு இரட்டைக் கொலையால் மக்கள் அச்சம்" - பாமக தலைவர் அன்புமணி

    “ஈரோடு அருகே நகைக்காக முதிய தம்பதிகளை கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது” தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரிப்பு; அடுத்தடுத்து நடக்கும் கொலைகளுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்படாததால் மக்கள் அச்சம்; தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 



  • May 02, 2025 12:53 IST

    தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்- மே7இல் விடுமுறை

    பெரிய கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு தஞ்சையில் மே 7இல் உள்ளூர் விடுமுறை. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 24 பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 



  • May 02, 2025 12:52 IST

    மதுரையில் அரசுப் பொருட்காட்சி மே 4இல் தொடக்கம்

    மதுரையில் சித்திரைத் திருவிழா அரசுப் பொருட்காட்சி மே 4இல் தொடங்கும் என ஆட்சியர் அறிவிப்பு. தமுக்கம் மைதானத்தில் மே 4 முதல் 45 நாட்களுக்கு தினமும் மாலை 3.45 முதல் இரவு 10 வரை பொருட்காட்சி நடக்கிறது; நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 நிர்ணயம்



  • May 02, 2025 12:35 IST

    மேல்நிலை தொட்டியில் யானைக் கழிவு

    நீலகிரி: கீழ் கோத்தகிரி அருகே குடிநீர் தொட்டியில் யானைக் கழிவுகள் கலக்கப்பட்டதால் அதிர்ச்சி. தூனேரி மேலூர் கிராமத்தில் உள்ள தொட்டியில் யானைக் கழிவு கலக்கப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை



  • May 02, 2025 11:47 IST

    வெள்ளியங்கிரி கோயில் பகுதிக்கு கும்கி யானை வரவழைப்பு

    வெள்ளியங்கிரி கோயில் பகுதியில் சுற்றிவரும் ஒற்றைக் காட்டு யானையை, காட்டுக்குள் விரட்ட கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு கருதி இம்முடிவு என கூறப்படுகிறது. டாப்சிலிப் முகாமில் இருந்து நரசிம்மன் என்ற கும்கி யானையை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர். நாளை மேலும் ஒரு கும்கி யானை அழைத்து வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 02, 2025 10:46 IST

    சூறாவளிக் காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியில் நேற்று மாலை திடீரென வீசிய சூறாவளிக் காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன. மிகப்பெரிய அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த விவசாயிகள், உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • May 02, 2025 10:21 IST

    கோவை மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்

    கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிடித்தம் செய்யப்படும் பி.எஃப். தொகையினை தங்கள் கணக்கில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



  • May 02, 2025 09:49 IST

    கள்ளநோட்டு அச்சடித்த விவகாரம்

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கள்ளநோட்டு அச்சடித்த விவகாரத்தில் விசிக பிரமுகர் செல்வம் ஒரு மாதத்திற்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். 



  • May 02, 2025 09:47 IST

    தங்கம் விலை குறைவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து  ஒரு சவரன் ரூ.70,040க்கு விற்பனையாகிறது.



  • May 02, 2025 09:46 IST

    மேட்டூர் அணை நிலவரம்

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 2,323 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 107.81 அடியாக அதிகரித்துள்ளது. நீர் இருப்பு 75.333 டி.எம்.சி. ஆக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர், தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.



  • May 02, 2025 09:44 IST

    நெருங்கும் சித்ரா பௌர்ணமி.. கிரிவலப் பாதையில் ஆட்சியர் ஆய்வு!

    வரும் 11, 12ம் தேதிகளில் சித்ரா பௌர்ணமி நடைபெற உள்ள நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை  மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்  ஆய்வு செய்தார்.



  • May 02, 2025 09:43 IST

    சிவகாசியில் பட்டாசுகள் விற்பனை சரிவு

    மத்திய அரசால் தடை செய்யப்பட்ட வேதிப் பொருள்கள் மூலம் தயாரித்து விற்கப்படும் பட்டாசுகளால் சிவகாசி பட்டாசு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சீனாவிலிருந்து விளையாட்டுப் பொருள்கள் என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, தமிழகத்துக்கே உரித்தான பட்டாசு தயாரிப்புத் தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பட்டாசு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Coimbatore Trichy Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: