Coimbatore, Madurai, Trichy News Updates: திருச்செந்தூர் குடமுழுக்கு: 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN Transport minister SS Sivasankar on Bike Taxi Tamil News

குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க தடை

Advertisment

நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Jun 24, 2025 22:07 IST

    திருப்பரங்குன்றம் மலையில் வழிபாட்டு உரிமை வாக்கு: ஐகோர்ட் முக்கிய உத்தரவு

    திருப்பரங்குன்றம் மலையில் வழிபாட்டு உரிமை தொடர்பாக பல தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றோ, சமணர் குன்று என்று அழைக்கக் கூடாது. 

    காசிவிஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவுக்கு மாலை 6 மணிக்கு மேல் யாருக்கும் அனுமதியில்லை என்பதால் மின்சார இணைப்பு தேவையில்லை

    சந்தனக்கூடு திருவிழாவைச் செய்ய தர்காவுக்கு அனுமதி உண்டு. 

    சாலை, குடிநீர் வசதி, கழிவறை வசதியெல்லாம் வழங்கப்பட்டால் குன்று சேதமடையும். எனவே அவற்றுக்கு அனுமதி இல்லை என நீதிபதி நிஷா பானு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    திருப்பரங்குன்றம் மலை சர்ச்சையில் அமைதி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் அமைப்புகள், நபர்களுக்கு எதிராக உறுதியான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளர்.



  • Jun 24, 2025 20:04 IST

    திருச்செந்தூர் குடமுழுக்கு: 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் குடமுழுக்கு விழாவையொட்டி, ஜூலை 4 முதல் 8-ம் தேதி வரை 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இந்த குடமுழுக்கு விழாவிற்கு சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Jun 24, 2025 18:54 IST

    காங்கயத்தில் சாலை மறியல்: 150 விவசாயிகள் கைது

    திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் சாலை மறியல் ஈடுபட்ட 150 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். காங்கயம் அருகே பிஏபி வாய்க்காலில் கடைமடை பகுதியான வெள்ளக்கோவில் பகுதிக்கு பாசன நீர் சரியான அளவில் விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும், சமச்சீர் பாசனத்தை வலியுறுத்தியும் இப்பகுதி விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளாக பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



  • Jun 24, 2025 18:23 IST

    ஆசிரியர் அடித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

    திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி பகுதியில் ஆசிரியர் அடித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்களின் பெயர்களை அவர் அங்கு பேப்பரில் எழுதி வைத்திருந்த நிலையில், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.



  • Jun 24, 2025 17:48 IST

    விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரயில்கள் 4 நாள்கள் ரத்து

    திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில்கள் 4 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து காலை 5.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66063), புதுச்சேரியிலிருந்து காலை 8.05 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி -விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66064) ஆகிய இரு ரயில்களும் ஜூன் 26,27,28, 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.



  • Jun 24, 2025 17:46 IST

    திருவெண்ணெய்நல்லூர் அருகே 2 சமையலர்கள் பணிநீக்கம்

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆணைவாரி ஊராட்சி பள்ளி சமையலர்கள் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவ, மாணவிகளுக்கான காலை உணவில் பல்லி விழுந்த விவகாரத்தில் 2 சமையலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். சமையலர்கள் சசிகலா, கலைச்செல்வி ஆகியோரை பணிநீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.



  • Jun 24, 2025 17:34 IST

    வைகை அணையிலிருந்து 7 நாட்கள் தண்ணீர் திறக்க உத்தரவு

    பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 7 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வைகை பூர்வீக பாசன பகுதி II மற்றும் I-ற்கு முறையே (513-55) 458 மில்லியன் கன அடி மற்றும் 342 மில்லியன் கன அடி, மேலும் சித்திரை திருவிழாவிற்கு தண்ணீர் வழங்க கையிருப்பு வைக்கும் நீரின் அளவான 216 மில்லியன் கன அடி தண்ணீரினை சேர்த்து ஆக மொத்தம் (458 + 342 + 216 = 1016 மில்லியன் கன அடி) இருப்பு வைத்தது போக இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதி II மற்றும் III-க்கு 25.06.2025 தேதி முதல் 01.07.2025 வரை 7 நாட்களுக்கு 1251 மில்லியன் கன அடி தண்ணீரை வைகை அணையிலிருந்து திறந்துவிட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது



  • Jun 24, 2025 17:23 IST

    கோவை காவல் ஆய்வாளருக்கு ரூ.50,000 அபராதம் விதிப்பு

    கோவை ரேஸ்கோர்ஸ் காவல் ஆய்வாளர் சாந்தமூர்த்திக்கு ரூ.50,000 அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புகார் அளிக்க வந்த பெண்ணை கண்ணியக் குறைவாக நடத்திய காவல் ஆய்வாளருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிலப் பிரச்சனை பற்றி புகார் தர வந்தபோது கண்ணியக் குறைவாக நடத்தியதாக பிரியதர்ஷினி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.



  • Jun 24, 2025 17:04 IST

    பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் மீது கார் மோதல்

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் மீது கார் மோதிய விபத்தில் வாகனத்தில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்கள் உயிர் தப்பினர். ஊத்துக்கோட்டை சாலை வழியே சென்ற பள்ளி வேன் பெரியபாளையம் கோவில் நின்ற போது அதே திசையில் பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.



  • Jun 24, 2025 16:34 IST

    கொடைக்கானல் கோட்டாட்சியர் எச்சரிக்கை

    கொடைக்கானலில் ஜூலை 1 முதல் அனுமதியின்றி பொக்லைன், போர்வெல் வாகனங்களை பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என கோட்டாட்சியர் எச்சரிக்கை



  • Jun 24, 2025 16:11 IST

    திருப்பூர்: விவசாயிகள்-போலீசார் இடையே கடும் தள்ளுமுள்ளு

    கடைமடை பகுதிக்கு நீர் வழங்கக் கோரி காங்கேயம் விவசாயிகள் போராட்டம். போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு, கால்நடைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட  விவசாயிகள்

    சம்பவ இடத்தில் போலீசார் குவிப்பு



  • Jun 24, 2025 16:08 IST

    ஓசூர் மேம்பாலத்தில் இலகுரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி

    கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விலகல் ஏற்பட்ட ஓசூர் மேம்பாலத்தில் இலகுரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி

    கனரக வாகனங்கள் சீதாராம்மேடு பகுதியில் வெளிவட்ட சாலையில் திருப்பி விடப்படுவதால் வாகன நெரிசல்



  • Jun 24, 2025 14:25 IST

    கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

    ஜூன் 27, 28ம் தேதி கோவை மலைப்பகுதிகள், நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு, ஜூன் 24, 25, 26ம் தேதி பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jun 24, 2025 12:55 IST

    கண்டதேவி கோயில் விழாவில் அனைவரும் சமமே: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு பதில்

    சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டத்தில் எந்த பாரபட்சமும் பார்ப்பது கிடையாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதும் கிடையாது; அனைவரும் சமமே என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பதிலை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.



  • Jun 24, 2025 12:51 IST

    வேங்கைவயல் வழக்கு ஜூலை 14க்கு ஒத்திவைப்பு!!

    நீதிபதி விடுப்பால் வேங்கைவயல் வழக்கை ஜூலை 14ம் தேதிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கில் 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, அண்மையில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கில் தங்களை விடுவிக்கக் கோரி குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் தொடர்ந்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



  • Jun 24, 2025 12:12 IST

    நெல்லை மாவட்ட காங். நிர்வாகி ஜெயக்குமார் மரணம்: சிபிசிஐடி விசாரணை

    நெல்லை மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்களிடம் சிபிசிஐடி தனித் தனியாக விசாரித்துள்ளது. 2024 மே 4ல் கரைசுத்து புதூரில் ஜெயக்குமார் வீட்டின் தோட்டத்தில் அவரது உடல் எரிந்த நிலையில் மீட்க்கப்பட்டது. ஜெயக்குமார் மரண வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.



  • Jun 24, 2025 12:11 IST

    திருச்செந்தூரில் குடமுழுக்கில் பூஜை செய்வது என அனைத்தும் தமிழில் நடைபெறும் -தமிழ்நாடு அரசு

    திருச்செந்தூரில் குடமுழுக்கில் பூஜை செய்வது என அனைத்தும் தமிழில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது. யாகசாலையில் மந்திரங்கள் ஒதுவது தொடங்கி, திருமறை பாடுவது என அனைத்தும் தமிழில் நடக்கும் என்றும் திருபுகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது என அனைத்து நிகழ்வுகளும் தமிழிலேயே நடைபெறவுள்ளன என்றும் ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.



  • Jun 24, 2025 12:10 IST

    முருகன் மாநாட்டுக்கு எதிராக மதுரை காவல் ஆணையரிடம் புகார்!!

    முருகன் மாநாட்டுக்கு எதிராக மதுரை காவல் ஆணையரிடம் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பினர் புகார் அளித்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக மாநாட்டில் அரசியல் கருத்துகள் பேசப்பட்டதாகவும், மாநாட்டில் அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றியதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் அளிக்கப்பட்டது.



  • Jun 24, 2025 11:36 IST

    7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் இன்று பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 24, 2025 09:47 IST

    லாரி - கார் மீது மோதி விபத்து

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் நடந்து சென்ற நபர் மற்றும் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. 



  • Jun 24, 2025 09:25 IST

    சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது மோதிய கார்

    நீலகிரியில் மக்கள் நடமாடும் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று விபத்து ஏற்பட்டது. தறிகெட்டு ஓடி சாலையோரம் நின்றிருந்த 3 பெண்கள் மீது பயங்கரமாக மோதியது, கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்தனர்.



  • Jun 24, 2025 09:19 IST

    குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க தடை

    நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tamil News Live Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: