Coimbatore, Madurai, Trichy News: திருச்செந்தூர் கும்பாபிஷேக வேள்வி விவகாரம் – அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tiruchendur crowd

தென்காசியில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, மாவட்டத்தின் பெரிய அணையான அடவி நயினார் அணை, 132 அடி கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • Jun 27, 2025 02:05 IST

    தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, நெல்லை, தென்காசி, குமரி, திண்டுக்கல், ஈரோடு, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jun 26, 2025 21:12 IST

    மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

    மதுரை ஆதீனம் மீது சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Advertisment
  • Jun 26, 2025 21:07 IST

    தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழகத்தில் இன்று (ஜூன் 26, 2025) இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மழைக்கான வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

    நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, தென்காசி, குமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 26, 2025 18:55 IST

    திருச்செந்தூர் கும்பாபிஷேக வேள்வி விவகாரம் – அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

    திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழில் வேள்வி செய்ய அனுமதி கோரிய வழக்கில், கும்பாபிஷேகங்களில் தமிழில் மந்திரம் உச்சரித்து வேள்வி குண்ட நிகழ்வுகள் நடைபெற, செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது 



  • Advertisment
    Advertisements
  • Jun 26, 2025 18:35 IST

    முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து, ரூ.5.65 ஆக நிர்ணயம்

    நாமக்கலில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை இன்று 5 காசுகள் உயர்ந்து, ரூ.5.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது



  • Jun 26, 2025 16:57 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது வினாடிக்கு 37, 263 கன அடியாக அதிகரிப்பு



  • Jun 26, 2025 15:28 IST

    டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 22,500 கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் நிலையில், டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 20,000 கன அடியில் இருந்து 22,500 கன அடியாக அதிகரிப்பு



  • Jun 26, 2025 14:46 IST

    சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர்களை திருடிய மாணவர்  கைது

     

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல்புல கணினி ஆய்வகத்தில் தமிழக அரசால் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள், சி.பி.யு.க்கள், கீபோர்டுகள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.கடந்த மாதம் இங்குள்ள ரூ.5 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது. இதேபோல் நேற்று முன்தினமும் அதே ஆய்வகத்தில் மேலும் சில கம்ப்யூட்டர்கள் திருடுபோனது. இதுகுறித்து அண்ணாமலை பல்கலைக்கழகபொறியியல் புலதுறைத்தலைவரும், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் செல்வகுமார் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சிதம்பரம் உட்கோட்ட டி எஸ் பி லாமேக் ஆகியோரின் உத்தரவின் பேரில் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தினர்.மேலும் பல்கலைக்கழகத்தில் உள்ள கண்காணிப்பு மேமராக்களை ஆய்வு செய்ததில், விருத்தாசலம் அருகே ஊ.மங்கலம் அரசக்குழியை சேர்ந்த ஜேசுதாஸ் மகன் லிவின் அஜய் (18) என்பவர் கம்ப்யூட்டர்களை திருடியது தெரியவந்தது.

    இதையடுத்து அஜய்யை அதிடியாக கைது செய்த போலீசார், அவர் திருடிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள 9 கம்யூட்டர்கள், 15 சி.பி. யு.க்கள், 4 கீபோர்டுகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட அஜய் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் உள்ள சுரங்கவியல் துறையில் டிப்ளமோ முதலாமாண்டு படித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தி: க.சண்முகவடிவேல்



  • Jun 26, 2025 14:33 IST

    மதுரையில் நடந்தது மோடி பக்தர்கள் மாநாடு - திருச்சியில் திருமா பேச்சு 

    திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், "தமிழகத்தில் அதிமுக, பாஜக சேர்ந்து என் டி ஏ கூட்டணியாக உள்ளன. அதிமுக கூட்டணிக்கு தனியாக பெயர் வைத்துள்ளதா என தெரியவில்லை. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இடம் பெற்றதாக தெரியவில்லை, எனவே கூட்டணி பற்றி கவலையில்லை. பாமக திமுக கூட்டணி வந்தால் விசிக திமுகவில் இருக்குமா என மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்வி? அப்படி ஒரு நிலை வந்தால் பார்க்கலாம். அதேநேரம் பாஜக, பாமக இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம். அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எண்ணிக்கை பற்றி எந்த பிரச்சினை வந்ததில்லை. 

    திரை உலகில் போதை கலாச்சாரத்தால் நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற கேள்விக்கு, அதிர்ச்சியான ஒன்று. போதைப்பழக்கத்திற்கு திரைத்துறையை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான விஷயம். தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும், போதை பொருட்கள் தடுக்கப்பட வேண்டும். இதற்கு கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும், தனி உளவு பிரிவை இருந்தாலும், தனிப்படை அமைத்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், தமிழக இளைஞர்களே காப்பாற்ற வேண்டும், இதில் திமுகவுக்கு என்ன சிக்கல் என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும் என வலியுறுத்துகிறோம். பெரியார், அண்ணாவை பற்றி இழிவாக சிறுமைப்படுத்தும் அவமதிக்கும் வகையில் வீடியோ ஒளிபரப்பப்பட்டது எதற்கு என அவர்கள் தான் சொல்ல வேண்டும். முருகன் பக்தர்கள் மாநாடு மோடி பக்தர்களின் மாநாடாகத்தான் நடைபெற்றது என தெரிவித்தார்.
       
    செய்தி: க.சண்முகவடிவேல்



  • Jun 26, 2025 14:31 IST

    பா.ம.க-வில் இருந்து வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ நீக்கம் -  ராமதாஸ் அறிவிப்பு 

    பா.ம.க-வில் இருந்து வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ-வை நீக்கம் செய்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். வெங்கடேஷ்வரனுக்கு பதில் தருமபுரி மேற்கு மாவட்ட பாமக செயலாளராக சரவணன் நியமனம் செய்யப்பட்டார்.



  • Jun 26, 2025 14:09 IST

    ஆடு கட்டும் தகராறில் கொலை-அதிமுக நிர்வாகி கைது

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி முத்துலட்சுமி அடித்துக் கொலை செய்யப்பட்டார். மூதாட்டி கொலையில் அதிமுக திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச் செயலர் ஆனந்த் பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.



  • Jun 26, 2025 13:24 IST

    உளுந்தூர்பேட்டை அருகே அதிமுக நிர்வாகி உள்பட 22 பேர் மீது வழக்கு

    கள்ளக்குறிச்சி: அதிமுக நிர்வாகி உள்பட 22 பேர் மீது வழக்கு பதிவுசெய்த போலீசார், 6 பேரை கைது செய்தனர். திருநாவலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளர் லோகநாயகியை பணிசெய்ய விடாமல் மிரட்டியதாக புகார் அதிமுக நிர்வாகி உள்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



  • Jun 26, 2025 12:49 IST

    கட்டுமான பொருள் விலை நிர்ணய பட்டியலை வெளியிட ஆணை

    அரசு ஒப்பந்த கட்டுமான பொருட்களின் விலை நிர்ணய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமானப் பொருட்களின் 2025-26க்கான விலை நிர்ணயப் பட்டியலை வெளியிடக் கோரி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ராம் என்பவர் மனு தாக்கல் செய்தார்.



  • Jun 26, 2025 12:22 IST

    திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஆலங்காயம் நெக்னாமலை பகுதியில் ரூ.30 கோடியில் 7 கி.மீ. நீள சாலை அமைக்கப்படும். குமாரமங்கலத்தில் ரூ.6 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். நல்லகுண்டாவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்; அதன் மூலம் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும். திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் உள்ள இடத்தில் ரூ.18 கோடியில் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்படும். ஆம்பூரில் ரூ.1 கோடியில் புதிய நூலகக் கட்டடம் கட்டப்படும் என்று அறிவித்தார்.



  • Jun 26, 2025 11:57 IST

    பள்ளி மாணவருக்கு கத்திக் குத்து

    திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் பள்ளிக்குச் சென்ற 11 வயது சிறுவனை, சிலர் கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



  • Jun 26, 2025 11:48 IST

    '2026 மட்டுமல்ல; தமிழ்நாட்டை எப்போதும் நாம் தான் ஆளப்போகிறோம்' - ஸ்டாலின் பேச்சு

    திருப்பத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, பேசிய அவர், '2026 மட்டுமல்ல; தமிழ்நாட்டை எப்போதும் நாம் தான் ஆளப்போகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 26, 2025 11:38 IST

    'விருதுநகரே விடைபெறுகிறேன் !' - மாவட்ட ஆட்சியரின் பிரியாவிடை கடிதம்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து விடைபெறுவதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "கடந்த இரண்டரை ஆண்டுகளாக விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றியதை எண்ணிப் பெருமை கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 26, 2025 10:33 IST

    திருப்பூர் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு - கேரளாவில் தேடுதல் வேட்டை

    திருப்பூர் இந்து முன்னணி பிரமுகர் பாலமுருகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, கேரளா மற்றும் வால்பாறையில் தனிப்படை போலீசார் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, தலைமறைவாக இருக்கும் நரசிம்ம பிரவீன் மற்றும் அஸ்வின் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.



  • Jun 26, 2025 09:55 IST

    மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

    நெல்லை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், இன்று முதல் (ஜூன் 26) சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது 



  • Jun 26, 2025 09:53 IST

    சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு

     தொடர் நீர்வரத்து காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 40.05 அடியில் இருந்து 42.64 அடியாக அதிகரித்துள்ளது. கோவை மக்களின் குடிநீர் தேவைக்காக 94.09 எம்எல்டி குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது



  • Jun 26, 2025 09:51 IST

    நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

    நாகை மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி அட்டூழியம் செய்து வருகின்றனர். நாகை செருதூர் கிராமத்தை சேர்ந்த 2 பைபர் படகு மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். செந்தில், சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான பைபர் படகுகளில் சென்ற 10 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.



  • Jun 26, 2025 09:20 IST

    மதுபோதையில் ஆபாச நடனம் ஆடிய அர்ச்சகர்கள் - 3 பேர் பணியிடைநீக்கம்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள்3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் 3 பேரும் சினிமா பாடலுக்கு ஆபாச நடனம் ஆடியது மற்றும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மீது விபூதி அடித்த வீடியோ வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில் பணியாளர் கார்த்திக் மீதும் புகாரளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Jun 26, 2025 08:55 IST

    குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் உலா வரும் ஒற்றை யானை

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் நரசிபுரம் குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் உலா வரும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். யானையை விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 



  • Jun 26, 2025 08:51 IST

    அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு. தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான அடவி நயினார் அணை 132 அடி கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 



  • Jun 26, 2025 08:50 IST

    சிறுமியை தாக்கியை சிறுத்தை பிடிபட்டது

    கோவை வால்பாறை அருகே 6 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது. பிடிப்பட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கடந்த வாரம் 20 ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை கவ்விச் சென்று கொன்றது. வனத்துறையினர் கூண்டு வைத்த நிலையில் சிறுமியைக் கொன்ற சிறுத்தை அதில் பிடிபட்டது.  



  • Jun 26, 2025 08:37 IST

    தென்காசியில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, மாவட்டத்தின் பெரிய அணையான அடவி நயினார் அணை, 132 அடி கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Tamil News Live Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: