/tamil-ie/media/media_files/uploads/2017/11/city-police.jpg)
தமிழகத்தில் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை, திருச்சி மாநகரங்களுக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர் போலீஸ் கமிஷனராக இருந்த அமல்ராஜ் ஐபிஎஸ் அங்கிருந்து மாற்றப்பட்டு, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அன்பு ஐபிஎஸ், சென்னை மாநகர போலீஸ் போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர போலீஸ் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த பெரியய்யா ஐபிஎஸ், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
சிவில் சப்ளை சிஐடி பிரிவு ஐஜியாக இருந்த வெங்கட்ராமன் ஐபிஎஸ், அங்கிருந்து மாற்றப்பட்டு ஐஜி நிர்வாக பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த பதவியில் இருந்த ஐஜி தினகரன் ஐபிஎஸ், எஸ்டாபிளிஷ்மெண்ட் பிரிவு ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருமதி சோனல் மிஸ்ரா ஐபிஎஸ், போலீஸ் பயிற்சி பள்ளி டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். உபியில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ள அமண்ட் மான் ஐபிஎஸ், அமலாக்கப்பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.