scorecardresearch

கோவை அருகே ஒரே நாளில் யானை தாக்கி இருவர் உயிரிழப்பு

கோவை அருகே வெவ்வேறு இடங்களில் யானை தாக்கிய சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர்.

elephants
Coimbatore

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவிற்குட்பட்ட மாங்கரை பகுதியில் அதிகாலை சுமார் 3 மணி அளவில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அப்போது யானையை விரட்ட முயன்ற போது மகேஷ் குமார் (36) என்பவரை எதிர்பாராத விதமாக யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் யானை அவரது உடலின் அருகிலேயே சுற்றி திரிந்துள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

பின்னர் தடாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவத்திற்கு வந்த காவல்துறையினர் மகேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யானை வரும் பொழுது  உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தால் யானையை விரட்டும் பணியை வனத்துறையினர் பாதுகாப்பாக மேற்கொள்வார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதே போல் ஆனைக்கட்டி துவைப்பதி மலை கிராமத்தில் அதிகாலை சிறுநீர் கழிக்க சென்ற மருதாச்சலம் என்ற நபரை மற்றொரு காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

ஒரே நாளில் வெவ்வேறு பகுதியில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் ஊர்மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore two men die in elephant attack

Best of Express