/indian-express-tamil/media/media_files/F6Z4deOr1JbicGNRiN1W.jpeg)
Coimbatore
கோவைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை தான் திமுக அரசு தற்போது திறந்து வைக்கிறது என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி விமர்சித்துள்ளார்.
கோவையில் புதிதாக அமைக்கபட்டு நேற்று முதல்வரால்திறக்கப்பட்ட உக்கடம்- ஆத்துபாலம்மேம்பாலத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிபார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர்செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கோவை மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டங்களை கொடுத்தார். அந்த வகையில் கோவை மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று உக்கடம் - ஆத்துபாலம் மேம்பாலம் அமைக்க ஜெயலலிதாசட்டபேரவையில் அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக கூடுதல் நிதி ஒதுக்கி, எடப்பாடி பழனிச்சாமி இந்த பாலம் கட்ட உறுதுணையாக இருந்ததார். அவருக்கு கோவை மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் இன்னும் இந்த பாலம் வேலை முழுமையாக முடியவில்லை. அரசு விரைந்து முடிக்க வேண்டும். கோவைக்கு அதிமுக அரசால் கொண்டு வந்த திட்டங்களை தான் திமுக அரசு திறந்து வைக்கிறது.
மேலும் கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
கோவை மாவட்ட மக்களின் மீது அன்பு வைத்துள்ளதால் தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்காத திட்டங்களை எல்லாம் தந்துள்ளார்கள். இந்த புதிய பாலத்தில் விபத்துகள் ஏற்பாடத வண்ணம் தேவையான நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி, கேட்டுக் கொண்டார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.