/indian-express-tamil/media/media_files/WUnsPRGuDWRGvj266auc.jpg)
Coimbatore
கோவை பீளமேடு பகுதியில் லவ்லி நெஸ்ட்மென்ஸ் எனும் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த  பிரவீன் குமார் (22) இங்கு தங்கியிருந்து அருகில் உள்ள டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று பிரவீன் குமார் பகலில் விடுதி அறையில் உறங்கியுள்ளார். எழுந்து பார்க்கும் போது அவரது செல்போன் காணாமல் போனது தெரியவந்துள்ளது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் மெதுவாக நடந்து வந்து அறைக்குள் சென்று செல்போன் திருடிவிட்டு செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
கோவையில் பட்டபகலில் தனியார் தங்கும் விடுதிகளில் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் மர்ம நபர்
— Indian Express Tamil (@IeTamil) September 9, 2024
சிசிடிவி வீடியோ pic.twitter.com/qdY6XN6djh
 இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து பிரவீன்குமார் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றன. 
கோவை மாநகரத்தில் தொடர்ந்து இரவு நேரங்களில் வீடு புகுந்து திருடிய சம்பவம் அரங்கேறி வந்த நிலையில் தற்போது பட்டப்பகலில் தனியார் தங்கும் விடுதிகளில் புகுந்து கை வரிசை காட்டிவரும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us