பயணிகள் ஆட்டோவில் நீர் மோர் வழங்கும் திட்டம்- கோவை மாவட்ட விஜய் கட்சியினர் புதிய முயற்சி

கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், ஆட்டோவில் நீர் மோர் வைத்து அதை ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கும், ஆட்டோ செல்லும் இடங்களில் உள்ள பொதுமக்களுக்கும் வழங்கி வருகின்றனர்.

கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், ஆட்டோவில் நீர் மோர் வைத்து அதை ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கும், ஆட்டோ செல்லும் இடங்களில் உள்ள பொதுமக்களுக்கும் வழங்கி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் தொடங்கி உள்ள ஆட்டோவில் நீர் மோர் வழங்கும் திட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Advertisment

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியை தொடங்கியதை அடுத்து அவரது ரசிகர்கள்சமூக பணிகளில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏற்கெனவே ரொட்டி, முட்டை, பால், போர்வை வழங்குவது, விஜய் பயிலகம், நூலகம் என பல்வேறு சமூக நலதிட்டங்களை செயல்படுத்தினர். தற்போது பயணிகள் ஆட்டோவில் நீர் மோர் வழங்கும் புதிய திட்டத்தை தொடங்கி உள்ளனர்.

Coimbatore

கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், ஆட்டோவில் நீர் மோர் வைத்துஅதை ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கும், ஆட்டோ செல்லும் இடங்களில் உள்ள பொதுமக்களுக்கும் வழங்கி வருகின்றனர்.

Advertisment
Advertisements

தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை, தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ் மற்றும் இளைஞரணி தலைவர் பாபு ஆகியோர் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தனர்

முதல் கட்டமாக ஐந்து ஆட்டோக்களில் வழங்கப்படும் இந்த நீர் மோர் திட்டம் படிப்படியாக புறநகர் மற்றும் நகர் பகுதிகளில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.

ஆட்டோவில் நீர் மோர் வழங்கும் திட்டத்தை பொதுமக்கள் பலர் பாராட்டி வருவது குறிப்பிடதக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: