Advertisment

கோவை அருகே விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்: டிராக்டர் உதவியுடன் விரட்டிய விவசாயிகள்

தற்போது வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் தண்ணீர், உணவு தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வரத் தொடங்கி உள்ளது.

author-image
WebDesk
New Update
coimbatore

Coimbatore

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை பேரூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள  தீத்திபாளையம், கரடிமடை ஆகிய கிராமப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் சில நாள் போராட்டத்திற்கு பிறகு வனப் பகுதியில் விரட்டினர்,.

Advertisment

தற்போது வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் தண்ணீர், உணவு தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வரத் தொடங்கி உள்ளது.

அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கம்பு, சோளம், தர்பூசணி போன்ற காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று  தீத்திபாளையம் அடுத்த கரடிமடை பகுதியில் குட்டியுடன் விளை நிலங்களுக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட யானை கூட்டம் புகுந்தது.

விளை நிலங்களில் புகுந்த யானைகளை டிராக்டர் உதவி கொண்டு அப்பகுதி விவசாயிகள்  விரட்டினர்.

கடந்த 5 நாட்களாக இரவு நேரங்களில் வனப் பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவதாகவும், வனத்துறையினருக்கு போதுமான ஜீப் உள்ளிட்ட வாகன வசதி இல்லாததாலும் யானைகளை வனத்திற்குள் விரட்டுவதில் சிக்கல் நீடிப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் யானைகளை விவசாயிகள் விரட்டிய வீடியோவை பதிவு செய்த செந்தில் குமாரை கைது செய்வதாக வனத்துறை ஊழியர்கள் மிரட்டுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றசாட்டுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment