Advertisment

கோவை தொண்டாமுத்தூரில் கூட்டமாக சாலையை கடந்து சென்ற யானை கூட்டம்- வைரல் வீடியோ

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அந்த யானை கூட்டத்தை தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் மலை அடிவாரத்தில் விரட்டினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore

Coimbatore

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது யானைகள் ஊருக்குள் புகுந்து அரிசி, விளை நிலங்களை சூறையாடிவிட்டு வனப் பகுதிக்குள் செல்கின்றன.

Advertisment

கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் வனப்பகுதி வறண்டு போனது. இதனால் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வர தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இன்று காலை பத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சாலையை கடந்து சென்றது. அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் இதை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அந்த யானை கூட்டத்தை தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் மலை அடிவாரத்தில் விரட்டினர்.

இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் அந்த சாலையை கடந்து சென்றனர்.  

யானைகள் ஊருக்குள் புகுந்து உயிர் சேதம் மற்றும் விவசாய நிலங்களை சேதத்தை ஏற்படுத்தாமல் வனத் துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment