கோவை மதுக்கரை வனச் சரகத்துக்கு உட்பட்ட குப்பனூர், தீத்திப்பாளையம் கிராமங்களில், வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சுற்றி வருகின்றன.
நேற்று முன்தினம் குப்பனுார் அருகில் உள்ள முள்காட்டிற்குள் காட்டு யானைகள் புகுந்தது.
இந்நிலையில் மதுக்கரை வனத்துறையினர், அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ட்ரோன் மூலம் யானைகளை கண்காணித்த வனத்துறையினர் இரவில் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
தற்போது அந்த யானைகள் மதுக்கரை வனப் பகுதியில் இருந்து கோவை வனச் சரகத்திற்குள் வந்துள்ளது. மருதமலை பகுதியில் உள்ள யானை முகடு பகுதியில் சுற்றி வருவதால் கோவை வனசரக வனத்துறையினர், யானைகளை கண்காணித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“