/indian-express-tamil/media/media_files/RARVpSUWDuKtYAApntdg.jpg)
கோவை வெள்ளலூர் பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு குப்பையை உரமாக பிரிக்கும் பணியும் நடைபெறும். இந்நிலையில் இங்கு பணிபுரியும் கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சத்யா (23) என்பவர் இன்று (செப்.28) இயந்திரத்திற்குள் சென்று சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மற்றொரு ஊழியர்கள் அவர் இயந்திரத்தில் இருப்பதை கவனிக்காமல் இயந்திரத்தின் சுவிட்ச்சை ஆன் செய்துள்ளனர். சத்யா இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டார். அவரது இரு கால்களும் இயந்திரத்தில் சிக்கியது.
பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு இயந்திரத்தை நிறுத்தி படுகாயம் அடைந்த அவரை தெற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
செய்தி: பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.