கோவை மாவட்ட  ஆட்சியரின் அழகான ஒயிலாட்டம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் பம்பை இசைக்க கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உற்சாகத்துடன் ஒயிலாட்டம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் பம்பை இசைக்க கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உற்சாகத்துடன் ஒயிலாட்டம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

author-image
WebDesk
New Update
கோவை மாவட்ட  ஆட்சியரின் அழகான ஒயிலாட்டம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில்  நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் பம்பை இசைக்க கோவை மாவட்ட  ஆட்சியர் சமீரன் உற்சாகத்துடன் ஒயிலாட்டம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது

Advertisment

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில்  பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் நோக்கில்  ஒயிலாட்ட நிகழ்ச்சி அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர்  சமீரன், சூலூர் சட்ட மன்ற உறுப்பினர் கந்தசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒயிலாட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இதில் ஒயிலாட்ட பாடல்களுக்கு சிறுவர் சிறுமியர் மற்றும் பெண்கள் நடனமாடினர். நடனத்தை ரசித்த ஆட்சியர்  சமீரன் ஒயிலாட்டம் ஆடும் இடத்திற்கு வந்து அங்கு பம்பை அடித்துக் கொண்டிருந்தவரிடம் பம்பையை வாங்கி அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பின்னர் நடனக்கலைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்ட நடனம் ஆடினார். இசைக்கு ஏற்ப ஆட்சியர்  நடனம் ஆடியது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Advertisment
Advertisements

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: