Advertisment

போதை மாத்திரை விற்பனை புகார்: மதுரையில் மெடிக்கல்களில் சி.சி.டிவி கட்டாயம் - ஆட்சியர் அதிரடி உத்தரவு

மதுரையில் போதை மாத்திரை விற்பனை புகார் எதிரொலியாக, மதுரையில் அனைத்து மெடிக்கல்களிலும் 30 நாட்களுக்குள் கட்டாயம் சி.சி.டிவி பொருத்த வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Sangeetha IAS

மதுரையில் மெடிக்கல்களில் சி.சி.டிவி கட்டாயம் - ஆட்சியர் அதிரடி உத்தரவு

மதுரையில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், மதுரையில் அனைத்து மெடிக்கல்களிலும் 30 நாட்களுக்குள் சி.சி.டிவி பொருத்துவது கட்டாயம், இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் சிறார்கள் மத்தியில் போதை மாத்திரை மற்றும் போதை டானிக் பயன்படுத்துவதால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, மதுரை மாவட்ட குழந்தைகள் நல வாரியம் சார்பில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் சிறார்கள் போதைக்கு அடிமையாகுவதை கட்டுப்படுத்த வேண்டும். போதை மாத்திரை விற்பனை செய்யும் மெடிக்கல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. 

இந்நிலையில், மதுரையில் அனைத்து மெடிக்கல்களிலும் 30 நாட்களுக்குள் சி.சி.டிவி பொருத்துவது கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா திங்கள்கிழமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரையில் மெடிக்கல்களில் 30 நாட்களுக்குள் சி.சி. டிவி பொருத்தாவிட்டால், மெடிக்கல் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment