சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், ஆண்டு விழாவில் நடனம் ஆடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவன் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூரைச் சேர்ந்தவர் கோகுல். இவர் காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.
இதில் சக மாணவர்களுடன் சேர்ந்து கோகுல் நடனமாடினார்.நடனம் ஆடிக்கொண்டிருந்த போது, மயக்கமடைந்தார்.அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.