/tamil-ie/media/media_files/uploads/2022/07/dementia-3-unsplash.jpg)
தென்காசியில் தேவர் ஜெயந்தி தினத்தில் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு
தென்காசியில் தேவர் ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது கொடிகம்பத்தில் கொடி கட்ட ஏறிய கல்லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவிந்தபேரி வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் கூலித்தொழிலாளியாக உள்ளார். இவரது 18 வயது மகன் முத்துகுமார் அம்பாசமுத்திரத்தில் உள்ள கலை கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துவந்தார்.
இந்த நிலையில் அக்.30 தேவர் ஜெயந்தி, நினைவு நாளை முன்னிட்டு ஊரில் உள்ள முப்பிடாதி அம்மன் கோயில் முன்பு கொடியேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்காக கொடிக்கம்பத்திற்கு பெயிண்ட் அடிக்கப்பட்டு மற்ற பணிகள் நடந்தன. இதில் இளைஞர்கள் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில் கொடிகம்பம் அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது உரசியுள்ளது.
அதில் முத்துகுமார் ஏற முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இந்த நிலையில் நிகழ்விடத்திலே அவர் உயிர் பிரிந்தது. இது தொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கல்லூரி மாணவர் முத்துக்குமார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.