தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என நீதிமன்றம் தீப்பளித்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20,500 அபராதமும் விதித்தது.
இந்தத் தீர்ப்பை குறிப்பிட்டு தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலர் அமுதா உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், “ராஜேஷ் தாஸை குடிமைப் பணி அதிகாரிகளின் ஒழுங்கு விதிமுறைகளின்படி கட்டாய ஓய்வில் அனுப்பும்படி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதில் ஏதாவது உடன்பாடு இல்லை என்றால் அரசிடம் முறையிடலாம் என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ராஜேஷ் தாஸ், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“