/tamil-ie/media/media_files/uploads/2019/09/a14-1.jpg)
tn trb pg exam 2019 pg trb exam chennai high court - முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வெழுதும் உதவியாளர்கள் நியமனம் - உறுதி செய்ய உத்தரவு
மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வின்போது தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து 2022ம் ஆண்டு வரை விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை தமிழக அரசு கடந்த 2006ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி கொண்டு வந்தது இதில் அனைத்து வகையான பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டது.
அதன்படி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட பிற மொழிகளிலும் பயிலும் மாணவர்களும் பொதுத் தேர்வுகளின்போது, தமிழ் பாடத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.
மொழிச் சிறுபான்மை மாணவர்கள் தரப்பில் தமிழ் தேர்வு எழுத விலக்களிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, 2014 -15 முதல் ஆண்டு தோறும், மொழிச் சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்களிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவை எதிர்த்தும், 2024 வரை ஐந்து ஆண்டுகளுக்கு மொழிச் சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க கோரியும், மொழிச் சிறுபான்மை பள்ளிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் ,அப்துல் குத்தூஸ் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய முழு அமர்வு, 2012ம் ஆண்டு முதல் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளதால், 2022ம் ஆண்டு வரை மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாட தேர்வு எழுத விலக்களித்து உத்தரவிட்டது.
மேலும், தமிழக அரசின் சட்டத்தை உறுதி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.