முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை - வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை 27-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே, அடுத்த 5 நாட்களில் தொடங்குவதற்கான வானிலை நிலைமை சாதமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை 27-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே, அடுத்த 5 நாட்களில் தொடங்குவதற்கான வானிலை நிலைமை சாதமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

முன்கூட்டியே தொடங்குகிறதா தென்மேற்கு பருவமழை? - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் மழைப் பொழிவுடன் தொடங்கிய கத்தரி வெயில் பின்னர் சுட்டெரிக்க தொடங்கியது. இதற்கிடையே, கடந்த 16-ந்தேதி முதல் லேசான மழைப் பொழிவு காணப்பட்டது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைபெய்து வெப்பத்தை தணித்தது. சில மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை 27-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே அடுத்த 5 நாட்களில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த 4 அல்லது 5 நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளது. இது தமிழகத்தின் சில பகுதிகளில் பரவும். இதேபோல, மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா, வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேலும், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் இன்று (புதன்கிழமை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது நாளை காற்றத்தழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும். பின்னர் இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும். இதனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தென்மேற்குப் பருவமழை தொடக்கம் மற்றும் முன்னேற்றம் எவ்வாறு அறிவிக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கமளித்த வானிலை ஆய்வு மையம், மே 10-ம் தேதிக்குப் பின் மினிகாய், அமினி, திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணூர், குடலு மற்றும் மங்களூர் ஆகிய 14 நிலையங்களில் 60% நிலையங்கள் தொடர்ச்சியாக 2 நாட்களுக்கு 2.5 மி.மீ (அ) அதற்கு மேல் மழையைப் பதிவு செய்தால், மேற்கத்திய காற்றின் வேகம் உள்ளிட்ட பிற அளவுகோல்களும் பூர்த்தி செய்யப்பட்டால், 2வது நாளில் கேரளாவில் பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்படலாம் என்று கூறியது. பருவமழை பொதுவாக ஜூன் 1-ம் தேதி கேரளாவில் தொடங்கி வடக்கு நோக்கி, பொதுவாக அலை அலையாக முன்னேறி, ஜூலை 15-ம் தேதிக்குள் நாடு முழுவதும் பரவும்.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை, வடக்கு தமிழ்நாட்டில் சில இடங்களிலும், மாநிலத்தின் தெற்குப் பகுதிகளிலும் பல இடங்களிலும் மழை பெய்தது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவியது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, பல நிலையங்களில் மழை பதிவாகியுள்ளது. திருத்தணியில் 56 மி.மீ., திருத்தணியில் 55.5 மி.மீ., திருவள்ளூரில் 43 மி.மீ., சேலம் 21 மி.மீ., செம்பரம்பாக்கம் 20.5 மி.மீ., தருமபுரியில் 19 மி.மீ., ராணிப்பேட்டை 18.5 மி.மீ., மாமல்லபுரத்தில் 18.5 மி.மீ., மாமல்லபுரத்தில் 13.5 மி.மீ., பூந்தமல்லி 5 மி.மீ., இந்துஸ்தான் பல்கலைக்கழகம் 4.5 மி.மீ., விஐடி சென்னை வளாகத்தில் 4 மி.மீ., ஏற்காடு 3.5 மி.மீ., குன்னூர் 3 மி.மீ., சென்னையில் மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் நிலையங்களில் மழை பதிவாகியுள்ளன.

மேற்கு-மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மேல் காற்று சுழற்சியானது மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழ்நாட்டை ஒட்டி அமைந்துள்ளது மற்றும் கடல் மட்டத்திலிருந்து 1.5 கிமீ வரை தென்மேற்கு திசைகளில் சாய்ந்துள்ளது. மே 26 வரை தமிழ்நாடு, புதுச்சேரி. காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனுடன் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்யக்கூடும். சனிக்கிழமை வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: