/indian-express-tamil/media/media_files/QCfcbldYzJY824QOElPZ.jpg)
கே.எஸ். அழகிரி தலைமையில் தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
congress:நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான குழுவில் 35 பேர் இடம் பிடித்துள்ளனர்.
அதன்படி, ப.சிதம்பரம், செல்வ பெருந்தகை, தங்கபாலு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன் நாச்சியப்பன், செல்லகுமார், மாணிக்கம் தாகூர் உட்பட 35 பேர் காங்கிரஸ் தேர்வு குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.