Advertisment

ராகுல் யாத்திரை; பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளுங்கள்; அண்ணாமலை கிண்டல்

ஒற்றுமை இந்தியா யாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தி; மோடி தலைமையிலான புதிய இந்தியாவை காணுங்கள் என அண்ணாமலை தாக்கு

author-image
WebDesk
New Update
K Anna malai

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை

Tamil Nadu BJP takes potshot at Rahul’s Bharat Jodo yatra, asks him to fill petrol in states ruled by party: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா (பாரத் ஜோடோ) யாத்திரையை தாக்கிப் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ராகுல் காந்தி தனது பயணத்தின் பணத்தை மிச்சப்படுத்த வேண்டுமெனில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மலிவான விலையில் அவரது வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

Advertisment

மேலும், இந்த யாத்திரை பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் புதிய இந்தியாவை நோக்கி ராகுல் காந்தியின் கண்களைத் திறக்கும் என்று அண்ணாமலை கூறினார்.

இதையும் படியுங்கள்: டெல்லி ஜே.என்.யூ-வில் தமிழ் இலக்கியவியல் தனித்துறை; ரூ.5 கோடி நிதி வழங்கி தமிழக அரசு அரசாணை

செப்டம்பர் 7 ஆம் தேதி தெற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி யாத்திரையைத் தொடங்க உள்ளார், இதற்காக காங்கிரஸ் கட்சி சின்னம், துண்டுப் பிரசுரம், இணையதளம் மற்றும் மைல் கதம், ஜூட் வதன் (நாட்டை ஒன்றிணைக்க ஒன்றிணைவோம்) என்ற கோஷத்தை வெளியிட்டனர்.

ஐந்து மாத கால யாத்திரை 12 மாநிலங்கள் வழியாக 3,500 கிமீ தூரம் கடந்து காஷ்மீரில் முடிவடையும்.

"திரு @ராகுல் காந்தி அவர்கள் 'பாரத் சோடோ'வுக்கு பிரபலமானவர், நாளை முதல் ஒரு யாத்திரையை மேற்கொள்கிறார், இது நமது மாண்புமிகு பிரதமர் திரு @நரேந்திரமோடி அவர்களின் கீழ் ஒரு புதிய இந்தியாவுக்கான அவரது கண்களைத் திறக்கும் மற்றும் கடந்த எட்டு ஆண்டுகளில் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெரிய வரும்!" அண்ணாமலை ஒரு ட்வீட்டில் கிண்டலாக கூறியுள்ளார்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களை விட தமிழகத்தில் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய அண்ணாமலை, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தனது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கூட்டாளியை, குறிப்பாக திமுக அரசிடம் வலியுறுத்துமாறு ராகுலிடம் கேட்டுக்கொண்டார்.

"உங்கள் பயணத்தில் பணத்தை மிச்சப்படுத்த, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மலிவு விலையில் உங்கள் வாகனத் தொடரணியில் உள்ள வாகனங்களின் எரிப்பொருள் தொட்டிகளை நிரப்பவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்!" என்று அண்ணாமலை கூறினார்.

தொடர் ட்வீட்களில், ராகுல் காந்தி குடும்பம் ஆழமாக முதலீடு செய்திருந்த "ஹம்சே நஹி ஹோ பயேகா" மனப்பான்மையை உடைத்து, இந்தியா எவ்வளவு தன்னிறைவு பெற்றுள்ளது என்பதுக் குறித்து "4G வம்சத்தினர்" மகிழ்ச்சியடைவார்கள் என்று அண்ணாமலை கூறினார். "இன்று, இந்தியா உலகின் விஸ்வகுருவாக மாறுவதற்கான பாதையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.

மோடியின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பல்வேறு வழிகளில் பார்க்க முடியும். இன்று, DBT (நேரடி பண விநியோகம்) வரிசைகளைத் தவிர்த்தது மற்றும் மாற்றப்பட்ட (வங்கி கணக்கில்) பணம் 100 சதவீதம் கசிவு இல்லாமல் சென்றடைந்தது. ஜன்தன் யோஜனா திட்டத்தால் கருவூலத்தில் ரூ.2.23 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. 1985-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, செலவழித்த ஒவ்வொரு ரூபாய்க்கும் 15 பைசா மட்டுமே பயனாளிகளுக்குச் சென்றடைகிறது என்று கூறியதை விட தற்போதைய நிலை முற்றிலும் மாறுபட்டது என்று அண்ணாமலை கூறினார்.

யாத்திரையின் போது, ​​கிராமப்புறப் பகுதிகளில் கூட டிஜிட்டல் பணம் எப்படி வழக்கமாகிவிட்டது என்பதை ராகுல் காந்தி கண்டு ஆச்சரியப்படுவார். இந்த ஆண்டு ஆகஸ்டில், நாடு முழுவதும் உள்ள 26 கோடி தனிப்பட்ட பயனர்களால் UPIகள் மூலம் ரூ.10.72 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

"ஒரு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கணக்கெடுப்பு, 83 சதவீத MSMEகள் மேக் இன் இந்தியா திட்டத்தால் பயனடைந்ததாகக் குறிப்பிட்டது, நீங்களும் உங்கள் கட்சியும் இழிவுபடுத்திய அதே திட்டமாகும். 2015ல் 8 ஸ்டார்ட்அப் யூனிகார்ன்களில் இருந்து, இன்று இந்தியா 103 யூனிகார்ன்களுடன் உயர்ந்து நிற்கிறது. உங்கள் யாத்திரையின் போது அவர்களை சந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அண்ணாமலை மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் 16.9 சதவீதமாக இருந்த கிராமப்புறக் குடும்பங்களின் குழாய்க் குடிநீர் வசதி இன்று 53 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், சௌபாக்யா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, 2.8 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

“எங்கள் மாண்புமிகு பிரதமர் உங்களுக்கு பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது... உங்கள் யாத்திரையின் போது விவசாயிகளைச் சந்தித்தால், 24 வேளாண் விளைபொருட்கள் இன்று MSPயில் (குறைந்தபட்ச ஆதரவு விலை) இருப்பதைக் கண்டு நீங்கள் வியப்படைவீர்கள்.”

பா.ஜக ஆட்சியின் கடந்த 8 ஆண்டுகளில் நெல்லுக்கான MSP 56 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது மற்றும் 11.36 கோடி PM கிசான் பயனாளிகளுக்கு இடைத்தரகர்கள் தலையீடு இன்றி ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.

"மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவது 'புழுக்களின் டப்பாவைத் திறக்கும்' என்று ஸ்ரீமதி இந்திரா காந்தியும் திரு ராஜீவ் காந்தியும் மறைமுகமாகச் சொன்னார்கள். உங்கள் உரையாடலின் போது, ​​இந்த பாரம்பரியத்தை மக்களுக்கு நினைவூட்டுவீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்," என்று பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Rahul Gandhi Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment