/tamil-ie/media/media_files/uploads/2023/06/Vijay-Vasanth.jpg)
ராகுல் காந்தி பிறந்நாள் கொண்டாட்டத்தின்போது நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் வசந்த்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53ஆவது பிறந்த நாளை, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், அவரது அலுவலகத்தில் கொண்டாடினார்.
அப்போது விஜய் வசந்த், ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து கேக் வெட்டப்பட்டு ராகுல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “நடிகர் விஜய்க்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. தற்போது அதனை வெளிப்படுத்த தொடங்கியுள்ளார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் விஜய்யை இணைக்க தயாராக உள்ளோம் அதை தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.
ஏற்கனவே கலைத்துறையில் இருந்து ஏராளமானவர்கள் வந்துள்ளனர் அவர்களில் பலர் சாதித்தும் உள்ளனர். அமலாக்கத்துறை செயல்பாடு என்பது அரசியல் நோக்கத்தோடு உள்ளது. செந்தில் பாலாஜியை சுமார் 13 மணி நேரம் தொந்தரவு செய்துள்ளனர்” என்றார்.
தொடர்ந்து, “கேரள தமிழகத்தை இணைக்கும் நான்குவழிச்சாலை பணி நடைபெற தடையாக இருப்பது பாறை கற்கள் கிடைக்காமல் இருந்ததே காரணம்” என்றார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.