/indian-express-tamil/media/media_files/UxD95phft6ShjhYX5cpJ.jpg)
நடிகை குஷ்பூவுக்கு எதிராக அவரது வீட்டின் முன்பு முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 100 மீட்டருக்கு முன்னதாக தடுத்து நிறுத்தப்பட்டனர்.
நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து பேசிய சர்ச்சை கருத்துக்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்தார். அப்போது சமூக வலைதளத்தில் குஷ்புவுக்கு எதிராக பதிவிட்டவருக்கு அளித்த பதிவில் சேரிமொழி என்று குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் எஸ்.சி பிரிவு கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் குஷ்பூ மனிப்பு கோர வலியுறுத்தி மாநில தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் இன்று குஷ்பு வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதையொட்டி சாந்தோம் நெஞ்சாலையில் உள்ள குஷ்பூவின் வீட்டுக்கு செல்லும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினரை பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் அருகே உள்ள சாலையில் போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதித்தனர்.
மாநில எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள். இதில் குஷ்பூவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் புகார் செய்வோம். அதன்பிறகு குஷ்புவை கண்டிக்கவும், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கவும் சங்க தலைவரிடம் புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக ரஞ்சன்குமார் கூறினார்.
இந்நிலையில் குஷ்பூ இல்லத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.