Advertisment

குடிநீருடன் சேர்ந்து வரும் கழிவு நீர்: உடல் பாதிப்புகள் ஏற்படுவதாக மக்கள் புகார்

மதுரவாயல் அருகே மெட்ரோ குடிநீருடன் கழிவுநீர் சேர்ந்து வருவதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக மக்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
con wat

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலம்பாக்கம் பாரதிதாசன் நகர் பகுதியில் மெட்ரோ குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் மக்கள் மெட்ரோ குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

Advertisment

இந்த குடிநீரை பயன்படுத்துவதால் உடல் அரிப்பு, தோல் நோய்கள், உபாதைகள் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த நான்கு வருடங்களாக இதுபோன்று குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். 

இதனால் தாங்கள் ஒரு குடம் பத்து ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவதாகவும், அப்படி பயன்படுத்தக்கூடிய தண்ணீர் வண்டியும் சில நேரங்களில் வருவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் தங்கள் பகுதியை சேர்ந்த மக்கள் அன்றாட வாழ்வுக்கே பெரும் அவதிப்படுவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment